ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 11

ரஹ்மான ஒரு ப்ளூ பேபி யாகத்தான் பிறந்தார். குழந்தை பிழைக்குமா என்பதே பெரிய கேள்வியா இருந்தது. அப்பா ரொம்ப டென்ஷன் நா இருந்தார். எப்படியோ குழந்தை உயிர் பிழைத்தது. அப்பா முகத்துல பெரிய நிம்மதி. குழந்தை வளர வளர அதுகிட்ட பெரிய இசைத்திறமை இருந்தததை பார்த்தவர், மிகுந்த உற்சாகம் ஆனார். தம்பிக்கிட்ட எப்பவும் ஒரு ஸ்பெஷல் அக்கறை காட்டுவார். தன்னோடு ரெகார்டிங் ஸ்டுடியோ எல்லாம் கூட்டிட்டு போய் இசை உலகத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனா எந்த பாரபட்சமும் கட்டாமல் என்னையும் ரகுமானையும் ஒரே நேரத்தில் பியானோ, கிடார் வகுப்புகள் ல பைலட் எட்வின் , தன்ராஜ் மாஸ்டரிடம் சேர்த்துவிட்டார். நாங்க வாசிப்பதையும் பாடுவதையும் ரொம்ப ரசிச்சு கேட்பார். அப்பெல்லாம் பாட்டும் கூத்துமாஎங்க குடும்பமே ரொம்ப ஜாலியாக இருப்போம். எங்க எல்லாருக்குமே அப்பான்னாரொம்பப் பிடிக்கும். அவர் தந்தது தானே எல்லாமே.
"அற்புதமான வாழ்க்கை அப்பா திடீர்னு இறந்து போனதும் ஸ்தம்பித்து போய்ட்டோம்." என்று அந்த நினைவலைகளில் ஆள்கிறார் ரைஹனா.
அதற்கு பிறகு என்ன ஆனது.?

ஆர்.கே.சேகரின் சமகால மலையாள இசையமைப்பாளர் அர்ஜுனன் மாஸ்டர் இப்போது கேரளாவின் கோட்டயத்தில் தன 73 ஆம் வயதிலும் சுறுசுறுப்பாக திரைப்பட இசை வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார். குரல் லேசாக தடுமாறினாலும் பழைய நிகழ்வுகளை அவர் தன இதயத்திலேயே வைத்திருக்கிறார்.
உண்மையிலேயே ரஹ்மானுடைய அம்மாவை ஒரு தீர்க்க தரிசினு தான் சொல்லணும். சேகர் இறந்த பொது திலீப் ரொம்பச் சின்ன பையன். ஆனா, அப்பவே என்னைப் போன்ற மியூசிக் டைரக்டர் களை எல்லாம் சந்திச்சு, என் மகனுக்கு இசை வாய்ப்பு கொடுங்க. அவன் கிட்ட பெரிய திறமை இருக்குன்னு சொல்லுவாங்க. "எங்க சேகர் பையனாச்சே மா .. நீங்க இவ்வளவு தூரம் சொல்லனுமா..? உடனே திலீப் பை வரச் சொல்லுங்கமா நு நாங்களும் சொல்லுவோம். அற்புதமா கி போர்டு வாசிப்பான். மியூசிக் இன்ச்ற்றுமென்ட் ல வர ரிப்பேர் எல்லாம் திலீப் ரொம்ப ஈஸி யாச் சரிபண்ணிடுவான். அவனை கி போர்டு வாசிக்க வைகலாமேன்னு தோனுச்சு. ஆனா ரொம்ப சின்னப் பையனா இருக்கானேன்னு யோச்சிசோம். வாய்ப்பு கொடுத்த பொது பொளந்து கட்டினான். அப்ப தான் அவன் ஒரு மியூசிக் கல் மேதை என்பது எங்களுக்கு புரிஞ்சது. எங்களுக்கு முன்னாடியே அந்த உண்மை, அவன் அம்மாவுக்குப் புரிஞ்சதுதான் அற்புதமான விஷயம். அப்ப நாங்க திலீப் கொடுத்தது ரொம்பச் சொற்பமான சம்பளம். எதுவுமே சொல்லாம புன்னகையோடு அந்தத் தொகையை வாங்கிட்டுப் போகும் அந்தப் பையன். அந்த அமைதியும் மசியுரிட்டி தான் ரஹ்மான்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கு.
தொடரும்..
உங்கள்கருத்துக்களைபகிரவும் ... நன்றி...






















