Thursday, September 29, 2011

இது தேவையா ?

இது தேவையா ?
















ஹஹாஹா தொப்பி தொப்பி....


இது உங்களுக்கு தேவையா?...

just for fun... :)

Wednesday, September 28, 2011

Arts on Leaves : இலைகளில் செய்த கலை.

Arts on Leaves : இலைகளில் செய்த கலை.



இந்த கலை இலைகளில் மெதுவாக சுரண்டுவதால் செய்யப்படுவது. இதில் உள்ள நரம்புகள் கிழியாமல் செய்வது அவ்வளவு சுலபம் கிடையாது. இதை முதன் முதலில் ஆரம்பித்தது சீனாவில். இங்குள்ள இலைகள் அனைத்தும் சீனாவில் உள்ள ஒரு மரத்தின் இலைகளில் செய்யப்பட்டது.அதன் படங்கள் இங்கே...





















































உங்கள் கருத்துக்களை பகிரவும்... நன்றி..

Monday, September 26, 2011

Top 8 Ayurvedic Herbs :சிறந்த ஆயுர்வேத மூலிகைகள்

Top 8 Ayurvedic Herbs :சிறந்த ஆயுர்வேத மூலிகைகள்

நாம் அன்றாடும் உபயோகிக்கும் உணவு வகைகளிலேயே பலவகையான ஆயுர்வேத மூலிகைகள் உள்ளன.அதை பற்றி இங்கு பார்போம்.

Ayurveda is an ancient system of medicine used in India and other Eastern countries. Much like Traditional Chinese Medicine, the Ayurvedic approach is holistic, and looks to address the root cause of disease, as opposed to simply treating a list of symptoms.

Ayurvedic herbs are commonly used as foods or culinary spices, and help to restore balance to the body. In Ayurvedic terms, when disease is present, it is the result of an imbalance in one of the three doshas, or the body’s vital energy.
These are pitta (fire), vata (air) and kapha (water). Herbs and food alike are used as part of a therapeutic regimen which may also include yoga, meditation and cleansing techniques.

The following herbs are considered a few of the most important remedies in Ayurvedic medicine.

They can be commonly found in most natural health food stores and herbal markets. Remember holistic treatments such as herbs are meant to complement, and not replace medical care.

Talk to your health care practitioner before using herbs for medicinal purposes.


01. ASHWAGANDHA



Although traditionally an Ayurvedic herb, ashwagandha is now commonly used in herbal medicine throughout the West. Also known as winter cherry, it is naturally antibacterial, anti-inflammatory, and has immune-boosting properties.

It is your first line of defense against cancer and other immune system-related diseases. It helps improve vitality and combat insomnia, cancer, arthritis and diabetes.


02. BOSWELLIA



Boswellia, known as Shallaki in Ayurveda, is an excellent pain remedy. It is naturally anti-inflammatory and analgesic. In the west it is called Frankincense, and has been used to treat both rheumatoid and osteoarthritis, gout, and general aches and pains. Studies have even shown that taking boswellia can alleviate arthritis pain in as little as 7 days without the harmful side effects of over-the-counter NSAIDs.


03. CORIANDER (CILANTRO)



Coriander, or dhanyaka as it is referred to in Ayurveda, is a common culinary spice in both Asian and Latin cuisine. The fresh leaves are called cilantro, while the ground seeds are called coriander. Both contain natural anti-inflammatory and analgesic properties.

The herb is used in Ayurveda to treat indigestion, irritable bowel syndrome, fevers, respiratory infections and allergies. It is also a natural chelating agent, and has been used to help remove heavy metals from the body.


04. GARLIC



Garlic is revered by both chefs and herbalists alike. The Ayurvedic name for the herb is Lasuna. It is a prolific bulb that is used for a number of purposes. It is naturally antiviral, antifungal and antibacterial. It has been shown to be effective against the common cold and flu, and help enhance immune function.

It is used in both holistic and conventional medical circles to protect against heart disease and lower cholesterol. Garlic is a must-have for the home medicine cabinet.


05. GINGER



Ginger, or shunti, is another versatile herbal remedy that doubles as a cooking spice. The root, or rhizome, is used to treat anything from benign conditions such as indigestion and nausea to more serious chronic problems such as arthritis and migraines. It is easily made into and herbal tea and makes a great home remedy tohave on hand.


06. GYMNEMIA SYLVESTRE



Shardunikagurmar, or more commonly, gymnema, is one Ayurvedic herb which has undergone extensive study. It has been found to be effective in treating and preventing type II diabetes because it appears to help control blood sugar levels. It can be used as a natural sweetener, or taken in capsule form.


07. TRIPHALA (AMLA, BIBHITAKI AND HARITAKI)



Amla, bibhitaki and haritaki are actually three herbs used together exclusively in an Ayurvedic formula known as triphala.

Amla is used to treat digestive disorders such as indigestion, gas, constipation, colitis and ulcers.

Bibhitaki is likewise used to treat digestive disorders, including Chron’s disease, intestinal parasites and gall stones.

Haritaki is used specifically for constipation, but is also effective for hemorrhoids, dysentery and parasites or worms.

Together these three herbs make a powerful internal cleansing remedy. They help restore balance and improve regularity. However, they are used only on a period basis due to their cathartic effect.



08. TURMERIC



Turmeric, or haridra, is the Indian spice which gives curry its golden color. It has been used in Ayurvedic medicine for thousands of years, but it has also been studied scientifically in modern day. It is naturally anti-inflammatory, antioxidant and helps strengthen the immune system.

It has been shown to be effective in treating arthritis, diabetes and even cancer. Keep this herb handy in the spice rack!

Share your thoughts--- Thanks :)

Friday, September 16, 2011

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் : ஒரு மாமனிதர் - பகுதி 5

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் : ஒரு மாமனிதர் - பகுதி 5




ஐம்பது வயதிற்குள் இதே புகழுடன் இறந்துவிட வேண்டும் என்று மதுரத்திடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் கலைவாணர். அதே போல் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி தனது 49வது வயதில் மரணத்தை தழுவினார் கலைவாணர்.

ஒரு கலைஞனை எங்ஙனம் நினைவுகூர்வது என்பது இன்னும் நமக்கு கைவரப் பெறவில்லை. அவனது ஆளுமையின் சாராம்சத்தை புதிய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் நமக்கு எப்போதும் தோல்வியே ப‌ரிசாகியுள்ளது. கலைஞனை, அவனது ஆளுமையை ஒரு பொருட்டாக மதிக்காததின் விளைவுகள் இவை என்ற பு‌ரிதலும் நமக்கில்லை.

கலைவாணர் என்றதும் அவரது சிந்திக்க வைக்கும் சி‌ரிப்புக்கு முன்னால் நினைவுக்கு வருவது அவரது வள்ளல் குணம். பெரும்பாலான கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிறருக்கு உதாரணமாக இருப்பதில்லை. கலைவாணர் விதிவிலக்கு.

மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும்போதும், கட்டுகட்டாக பணம் வைத்துச் சென்ற எம்.‌ஜி.ஆ‌ரிடம், சில்லரையாக வைத்தால் இங்கிருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பேனே என்று சொன்னவர்.

“என்னிடம் வந்து சேரும் பணத்துக்கும், பணக்காரர்களிடம் வந்து சேரும் பணத்துக்கும் வித்தியாசம் உண்டு. என் பணம் ஏழைகளுக்கு உதவும், பணக்காரர்களின் பணம் ஏழைகளை உறிஞ்ச‌த்தான் உதவும்.” சொன்னது போலவே வாழ்ந்து காட்டினார். அதுதான் கலைவாணர்.

சிறைக்கு சென்றுவந்த பிறகுதான் பம்மல் சம்பந்த முதலியார் அவருக்கு கலைவாணர் என்ற பட்டத்தை அளித்தார். ஏன்? அவரது வள்ளல் குணத்துக்கு முன்னால் சிறையும் ச‌ரி, தண்டனையும் ச‌ரி மாசு கற்பிக்க முடியவில்லை. உங்களுடைய கொள்கை என்ன என்று ஒருமுறை கேட்டதற்கு சுயம‌ரியாதை என்று பதிலளித்தார் கலைவாணர். அவரது கொள்ளை சுயம‌ரியாதை என்றால் அவரது குணம் அன்பு செய்வது.

இந்த இரண்டின் பிரதிபலிப்புதான் அவரது நாடகங்களும், சினிமாவும். இதுதான் அந்த கலைஞனின் சாராம்சம்.

இத்துடன் நிறைவு பெறுகின்றது...

உங்கள் கருத்துக்களை பகிரவும் நன்றி...:)

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் : ஒரு மாமனிதர் - பகுதி 4

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் : ஒரு மாமனிதர் - பகுதி 4



1944 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மோசமான வருடம். 1944 நவ. 27 கலைவாண‌ரின் இரண்டாவது கைது நடந்தது. இந்துநேசன் பத்தி‌ரிகையாசி‌ரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தொடர்பாக கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். லட்சுமிகாந்தனின் இந்துநேசன் ஒரு மஞ்சள் பத்தி‌ரிகை.

பிரபல நட்சத்திரங்களை பற்றி கற்பனையான கிசுகிசுக்களை எழுதி பத்தி‌ரிகையை நடத்தி வந்தார் லட்சுமிகாந்தன். அவரது பேனா கொடுக்குக்கு இரையாகாமல் இருக்க பலரும் அவருக்கு பணம் கொடுத்து வந்தனர். கலைவாணர் பணம் கொடுக்க மறுத்தார். கலைவாணர் பற்றியும் பாகவதர் குறித்தும் தனது பத்தி‌ரிகைகளில் கற்பனையான பல கதைகளை எழுதி வந்தார் லட்சுமிகாந்தன்.

தங்களது நிரபராதித்துவத்தை நிரூபிக்க கலைவாணருக்கும், பாகவதருக்கும் பல வருடங்கள் பிடித்தது. சிறை மீண்டபின் பழைய உற்சாகத்துடன் திரை வாழ்க்கையை‌த் தொடங்கினார் கலைவாணர். கே‌ரி கூப்பர் நடிப்பில் வெளிவந்த டெட்ஸ் கோஸ் டூ டவுன் படத்தை நல்லதம்பி என்ற பெய‌ரில் மதுரம், எஸ்.வி.சகஸ்ரநாமம், பானுமதி ஆகியோருடன் இணைந்து தயா‌ரித்தார். அண்ணா படத்தின் திரைக்கதையை எழுதி‌க் கொடுத்தார்.

இந்தப் படத்துக்குப் பிறகு கலைவாணருடன் அண்ணாவுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. கலைவாணர் வாங்கிக் கொடுத்த காரை அவர் திருப்பி அனுப்பினார். கலைவாணர் இயக்கிய முதல் படம் மணமகள். இன்றைய முதல்வர் கருணாநிதி படத்துக்கு வசனம் எழுதினார். நாட்டிய‌ப் பேரொளி பத்மினி அறிமுகமானதும் இந்தப் படத்தில்தான். கலைவாணர் இயக்கிய இன்னொரு படம் பணம்.

சொந்தமாக படம் தயா‌ரிக்கத் தொடங்கிய பிறகு கலைவாணருக்கு வாய்ப்புகள் குறைந்தன. செலவு இருமடங்கானது. ஆனாலும், கலைவாணரைத் தேடி உதவி பெற்று செல்கிறவர்கள் குறையவில்லை. தன்னிடம் இல்லாதபோது பிற‌ரிடம் கடன் வாங்கி உதவிகளை‌த் தொடர்ந்தார். இறுதிவரை அவரது உதவி செய்யும் குணத்தை தோல்விகளால் தடுக்க முடியவில்லை.

கலைவாணர் என்ற மாமனிதனின் சாராம்சம்...அடுத்த பதிவில் ...
உங்கள் கருத்துக்களை பகிரவும் நன்றி...:)

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் : ஒரு மாமனிதர் - பகுதி 3

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் : ஒரு மாமனிதர் - பகுதி 3



திரைத்துறைக்கு வரும் முன்பே நாகம்மை என்பவருக்கும் கலைவாணருக்கும் திருமணம் நடந்தது. நாகம்மை அவரது உறவுக்காரர். நடிக்க வந்த பிறகு உடன் நடித்த டி.ஆர்.ஏ.மதுரத்தை காதலித்து இரண்டாவதாக மணம்பு‌ரிந்து கொண்டார். (மதுரத்துக்குப் பிறந்த குழந்தை இறந்த பிறகு மதுரத்தின் சம்மதத்துடன் அவரது தங்கை வேம்புவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்). கிருஷ்ணன், மதுரம் ஜோடி திரையில் புகழ்பெறத் தொடங்கியது.

தனது முதல் திருமணத்தை மறைத்தே மதுரத்தை திருமணம் செய்து கொண்டார் கிருஷ்ணன். இது தெ‌ரிய வந்த பிறகு கிருஷ்ணனுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தார் மதுரம். தியாகராஜ பாகவத‌ரின் அம்பிகாபதி படத்தில் இருவரும் நடித்திருந்தாலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் இந்த‌ப் பி‌ரிவு அதிகநாள் நீடிக்கவில்லை. இருவரும் தனித்தனியாக நடித்தப் படங்கள் அவ்வளவாக வரவேற்பு பெறாததை உணர்ந்தவர்கள் மீண்டும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர்.

கலைவாண‌ரின் திரை ஆளுமையை வடிவமைத்ததில் பெ‌ரியாருக்கும், பா.‌‌ஜீவானந்தத்துக்கும் பெரும் பங்குண்டு. ‌ஜீவானந்தம் கலைவாண‌ரின் நெருங்கிய நண்பர். பெ‌ரியா‌ரின் பிராமணருக்கு எதிரான கட்டுரைகள் கலைவாண‌ரிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. தான் நடிக்கும் படங்களில் பகுத்தறிவு சிந்தனைகளை இயல்பாக சேர்த்துக் கொண்டார் கலைவாணர். பாகவத‌ரின் பக்திப் படமான திருநீலகண்டர் படத்திலும் கடவுளை கிண்டல் செய்யும் பாடலை இடம்பெறச் செய்தார்.

இந்த இடத்தில் முக்கியமாக ஒன்றை குறிப்பிட வேண்டும். சிலரது நகைச்சுவையை‌ப் போல் என்.எஸ்.கே.யின் நகைச்சுவை பிறரை காயப்படுத்துவதில்லை. ஹாஸ்யம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி எழுதிய அறிஞர் வ.ரா. “கிருஷ்ணன் பிறரைக் கேலி செய்யும் விதமே வினோதமாக இருக்கிறது. யாரை அவர் கேலி செய்து கிண்டல் பண்ணுகிறாரோ அவரும் சேர்ந்து சி‌ரிக்கும்படியான விதத்தில் கிருஷ்ணன் கேலி செய்கிறார். பிறருடைய உள்ளத்தை குத்திப் பிளப்பதில்லை. அவர் பிறருடைய உள்ளத்தை வி‌ரிய‌ச் செய்கிறார்.” என்று எழுதுகிறார்.


கலைவாணர் மீண்டும் கைது... அடுத்த பதிவில்...
உங்கள் கருத்துக்களை பகிரவும் நன்றி...:)

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் : ஒரு மாமனிதர் - பகுதி 2

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் : ஒரு மாமனிதர் - பகுதி 2


கலைவாண‌ரின் திரை வாழ்க்கை:
கலைவாண‌ரின் திரை வாழ்க்கையை தொடங்கி வைத்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதி. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமில்லாது பல ஜாம்பவான்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது. எம்.‌ஜி.ஆர்., எம்.‌ஜி.சக்கரபாணி, டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா, எம்.வி.மணி, கே.வி.தங்கவேலு ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.

தனது முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை கலைவாணரே எழுதிக் கொண்டார். தமிழ் திரையில் நகைச்சுவைக்கென தனி ட்ராக் எழுதியவரும் அவரே. முதல் படம் சதிலீலாவதி என்றாலும் திரைக்கு முதலில் வந்த படம் மேனகா. இது கலைவாணர் நடித்து வந்த நாடகம். திரைப்படமாக எடுத்த போது நாடகத்தில் கலைவாணர் நடித்து வந்த சாமா அய்யர் வேடத்தை அவருக்கே அளித்தனர்.

சாமா அய்யர் கதைப்படி வில்லன். நாயகியை கடத்தி வந்து ஐயாயிரம் ரூபாய்க்கு விற்று விடுவார். அவருக்கு உடந்தையாக இருக்கும் தாசி கமலம், அவ‌ரிடமிருந்து பணத்தை அபேஸ் செய்ய சாமா அய்யரை மயக்கி பாட்டுப் பாடும் காட்சியும் படத்தில் உண்டு.

1935ல் எடுக்கப்பட்ட மேனகாவில் வில்லனாக காட்டப்பட்டவர் ஒரு அய்யர். ஆனால் இன்று...? அய்யர் என்றாலே அப்பாவிகள், அநீதியை கண்டு குமுறுகிறவர்கள். (அய்யர் என்றால் அக்மார்க் அம்மாஞ்சிகள் என்ற இன்றைய தமிழ் சினிமா கண்டுபிடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்று).

பாரதியார் பாடல்கள் முதலில் திரையில் ஒலித்தது ஏவி.எம். தயா‌ரித்த படத்தில் என்று இன்றளவும் கூறப்படுகிறது. அந்த கருத்து தவறானது. திருப்பூர் சண்முகானந்தா டாக்கீஸ் தயா‌ரித்து ராஜா சாண்டோ இயக்கத்தில் கலைவாணர் நடித்த மேனகா திரைப்படத்தில்தான் முதல்முதலாக பாரதியார் எழுதிய வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி, வாழிய வாழியவே பாடல் ஒலித்தது.

கலைவாணரின் திருமண வாழ்க்கை ... அடுத்த பதிவில்...
உங்கள் கருத்துக்களை பகிரவும் நன்றி...:)

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் : ஒரு மாமனிதர் - பகுதி 1

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் : ஒரு மாமனிதர் - பகுதி 1



நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) பிறந்தது கன்னியாகும‌ரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசே‌ரி. அப்பா சுடலையாண்டி பிள்ளை, தாய் இசக்கியம்மாள். பிறந்த வருடம் 1908 நவ. 29 ஆம் நாள். ஏழு பே‌ரில் இவர் மூன்றாவது பிள்ளை. வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் படிப்பு தடைபடுகிறது.

என்.எஸ்.கே.-யின் ஆரம்ப நாட்கள் கடுமையானவை. காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடும் வேலை. பிறகு மளிகைக் கடைக்கு பொட்டலம் மடிக்க‌ச் செல்வார். மாலையில் நாடகக் கொட்டாயில் தின்பண்டங்கள் விற்பார். நாடகம் அவரை மிகவும் ஈர்த்தது. மகனின் விருப்பம் அறிந்த தந்தை ஒழுகினசே‌ரியில் நாடகம் போட வந்த ஒ‌ரி‌ஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். சிறுவனின் நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.

பாய்ஸ் நாடக கம்பெனியிலிருந்து டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபையில் சேர்கிறார் கிருஷ்ணன். அங்கிருந்து பால மீனரஞ்சனி சங்கீத சபை. பல நாடக கம்பெனிகள் மாறினாலும் அவருக்கு டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபையே மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.

ஒப்பந்தத்தை மீறி பால மீனரஞ்சனி சங்கீத சபையிலிருந்து வெளியேறி மீண்டும் ஸ்ரீ பால சண்முகனாந்தா நாடக சபையில் சேர்கிறார். இதனால் கோபமுற்ற பால மீனரஞ்சனி சங்கீதா சபை ஜெகன்னாத அய்யா, கிருஷ்ணன் மீது பணம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் பொய்யாக புகார் தருகிறார். ஆலப்புழையில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கைது செய்யப்படுகிறார்.

இந்த முதல் கைதுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டார் கிருஷ்ணன். அந்த கைது தமிழ்நாட்டையே உலுக்கியது.

நாடகத்தில் பல ப‌ரீட்சார்த்த முயற்சிகளை கலைவாணர் மேற்கொண்டார். வில்லு‌ப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர் இவரே. தேசபக்தி நாடகத்தில் காந்தி மகான் கதை என்ற பெய‌ரில் வில்லு‌ப் பாட்டை சேர்த்து காந்தியின் மது அரு‌ந்தாமை கொள்கையை‌ப் பரப்பினார். இந்த நாடகத்தில் கலைவாணர் ராட்டையுடன் வரும் காட்சிக்காக நாடகம் தடைசெய்யப்பட்டது.

கிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கலைவாணர் செய்யும் காலட்சேபம் பிரசித்திப் பெற்றது. அன்பே கடவுள் என்ற முகவுரையுடனே காலட்சேபம் தொடங்கும். இதில் கலைவாணர் எழுதிய ரயில் பாடல் குறித்து திராவிட நாடு பத்தி‌ரிகையில் கட்டுரை ஒன்று எழுதினா‌ர் அண்ணர். சாதி, மத ஏற்றத்தாழ்வை ரயில் இல்லாமல் செய்ததை அந்த பாடலில் குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.

"கரகரவென சக்கரம் சுழல கரும்புகையோடு வருகிற ரயிலே கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே."

நாடகத்தில் கலைவாணர் செய்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகம் போட்டிருக்கிறார். நாடக கம்பெனி ஏதேனும் நொடித்துப் போனால் கலைவாணருக்கு சேதி வரும். அவர் சென்று ஒரு நாள் நடித்துவிட்டு வருவார். அந்த நாடகம் கலைவாணர் நடித்தார் எனபதற்காகவே மக்களிடம் வரவேற்பை பெறும்.

கலைவாணரின் சினிமா வாழ்க்கை ... அடுத்த பதிவில்...
உங்கள் கருத்துக்களை பகிரவும் நன்றி...:)

Enter the Dragon - எண்டர் தி டிராகன் : A BRUCE LEE movie

Enter the Dragon - எண்டர் தி டிராகன் : A BRUCE LEE movie



புரூஸ் லீ- அன்று முதல் இன்று வரை ஆக்சன் பிரியர்களுக்கு பிடித்த ஒரு நடிகர். இன்று வரும் எத்தனையோ ஆக்சன் படங்களின் முன்னோடி. இதில் என்னை மிகவும் கவரத படம் "Enter the Dragon - எண்டர் தி டிராகன்". இந்தப்படம் 1976ஆம் ஆண்டில் இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டது.நான் இந்த படத்தை விஜய் டிவி இல் பார்த்தேன்.இப்போது உள்ள எந்த நடிகராலும் இவரை போல ஆக்சன் செய்ய முடியாது.இவர் நுஞ்சக் சுற்றும் ஸ்டைல்லே தனி தான்...

"You offended my family and offended the shaolin temple”

என்று வில்லனை நோக்கி நிலைகுத்திய கூர்பார்வையுடன் கூறிவிட்டு, அவனோடு மோதுவதற்கு தயாராக, தனக்கே உரித்தான சண்டைத் துவக்க பாணியில் புரூஸ் லீ காலை விரித்துவைத்து, தனது கைகளை உயர்த்தி சண்டை செய்யும் போது பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோன்றும்.இன்று எவ்ளவோ அதிநவீன கேமெராக்கள் வத்தலும் இவரின் வேகம் போல வேறு எந்த ஆக்சன் ஹீரோ இல்லை.

கதை:

இது ஒரு சாதாரணக் கதைதான் (ஒரு விதத்தில் பழி வாங்கும் கதையும் கூட) எண்டர் த டிராகன். ஹாங்காங்கிற்கு அருகில் உள்ள ஹான்ஸ் தீவை சொந்தமாக வைத்துக்கொண்டு போதைப்பொருள் தயாரித்து அதனை உலகளாவிய அளவில் கடத்தி விற்றுவந்தவனை ஆதாரப்பூர்வமாக பிடிக்க முயன்ற ஹாங்காங் காவல்துறை பல உளவாளிகளை அனுப்புகிறது. அவர்களில் பலர் பெண்கள். ஓரளவிற்கு உண்மை தெரிகிறது. உண்மையை அறிந்து வெளியே செல்ல முயன்றவர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் - தற்காப்புக் கலையில் கைதேர்ந்த - அவனை முடிக்க தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும் வீரனை தேர்ந்தெடுத்து அனுப்புகிறது ஹாங்காங் காவல் துறை. அவர்தான் புரூஸ் லீ.

ஹான்ஸ் தீவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தற்காப்பு கலைப் போட்டியில் பங்கேற்க புரூஸ் லீ அனுப்பப்படுகிறார். உலக அளவில் சிறந்த விளங்கிய கராத்தே, பாக்சிங் உள்ளிட்ட பல கலைகளில் சிறந்த வீரர்களும் கலந்துகொள்ள வருகின்றனர்.



போட்டியின் முதல் சுற்றிலேயே, தனது தங்கையை கற்பழித்துக் கொன்றவனும், வில்லனின் மெய்க்காப்பாளனுமாகிய கராத்தே வீரனை (பாப் வால்) தோற்கடிக்கிறார் (கண்ணிமைக்கும் நேரத்தில் குத்துகள் விழுகின்றன) புரூஸ் லீ. தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அவன் புரூஸ் லீயைக் கொல்ல பாட்டில்களை உடைத்துக்கொண்டு குத்துவதற்குப் பாய, அவனுடைய கழுத்தில் வெட்டு உதை கொடுத்து கொன்றுவிடுகிறார் புரூஸ் லீ. அவனைக் கொன்ற நிலையில், குரூர முகத்துடன் வில்லனை ஒரு பார்வையும் பார்த்துவிட்டுச் செல்வார்.

வில்லனின் போதை சாம்ராஜ்யத்தின் ரகசியங்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு இரவும் புரூஸ் லீ ரகசிய உளவில் ஈடுபடுவதும், ஒரு நாள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அங்கிருந்த வில்லனின் காவலாளிகளைப் பந்தாடுவதும், ஏராளமானவர்களை தன்னைச் சூழ்ந்துவிட்ட நிலையில், தான் மறைத்து வைத்திருந்த நன் சாக்கு ஆயுதத்தை எடுத்து கையிலெடுத்து கண்ணில் பிடிபடாத வேகத்தில் சுழற்றுவதும், பிறகு அவர்களை அடித்து வீழ்த்திவிட்டு வில்லனிடம் சிறைபடுவதும் அபாரமான காட்சிகள்.




இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த கராத்தே வீரர் (ஜிம் கெல்லி) அருமையாக சண்டையிட்டு வெற்றி பெற்ற பிறகு வில்லனால் அடித்துக் கொல்லப்படுவதும், அதனைக் கண்டு மற்றொரு போட்டியாளர் (ஜான் சாக்சன்) மிரள்வதும் ரசிகர்களை அச்சுறுத்திய காட்சிகள்.

பிறகுதான் உச்சக் கட்டம். புரூஸ் லீயும், ஹான்ஸ் (இவர் புரூஸ் லீயின் மாமன்தான்) மோதல் காட்சி. துண்டிக்கப்பட்ட கையில் எஃகு ஆயுதங்களைத் தரித்து ஹான்ஸ் சண்டையிட, அதில் சிக்காமல் லாவகமாக விலகி அவரை புரூஸ் லீ அடித்து வீழத்த ஒன்றரை மணி நேரத்தில் படம் முடிந்துவிடுகிறது.



இப்படத்தில் லேலோ ஸ்கீஃபனின் இசை மிக அற்புதமானது. குறிப்பாக, போட்டியாளர்கள் ஹாங்காங் துறைமுகத்தில் படகு பிடித்து தூரத்தில் நிற்கும் பாய்மரக் கப்பலிற்கு செல்லும் காட்சியில் அவருடைய இசையமைப்பு மிக அழகானது.

தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே இத்திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆக்ஷன் படங்களை விரும்பிப்பார்க்கும் ரசிகர்களை புரூஸ் லீயின் அதிரடி மிகவும் ஈர்த்தது.

தற்காப்புக் கலைஞன் ஒருவனின் திறமையில் நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பின்னாளில் ஏராளமான சண்டைப்படங்களை தயாரிக்க வைத்தது. ஒரு கால் நூற்றாண்டுக் காலத்திற்கு ஹாங்காங்கில் பல சண்டைத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் வித்திட்டது எண்டர் த டிராகன். புரூஸ் லீ!

உங்கள் கருத்துக்களை பகிரவும்... நன்றி.. :)

Tuesday, September 13, 2011

ட்வின் டவர்ஸ் படங்கள் 9/11 : அப்போ - இப்போ

ட்வின் டவர்ஸ் படங்கள் 9/11 : அப்போ - இப்போ
Twin Towers pictures: Then - Now



Left) New Yorkers walk over the Brooklyn Bridge on their way to work, April 7, 1980, during the transit strike. (Right) People flee the scene of the attacks on the World Trade center on September 11, 2001



(Left) The Brooklyn Bridge is seen spanning over New York's East River, with the twin towers of the World Trade Center in the background, June 12, 1990. (Right) Smoke rises behind the Brooklyn Bridge over the East River, and frames the skyline of Manhattan, minus the World Trade towers, the day after hijacked airplanes crashed into both buildings causing their collapse.



(Left) Daniel Goodwin ("Spider Man") climbs the sheer face of the North Tower of the World Trade Center in Manhattan, New York City on May 30, 1983. (Right) Smoke pours out of the World Trade Center after an air plane struck the buildings on Tuesday morning, September 11, 2001.



Cleanup and recovery efforts continue in this overall view at the site of the World Trade Center disaster.



(Left) This general view shows the World Trade Center twin towers as construction continues on the buildings at Church Street between Vesey and Liberty Streets in lower Manhattan, New York City, on Jun 13, 1970. (Right) This photo taken by the New York City Police Department shows smoke and ash engulfing the area around the World Trade Center in New York.



(Left) New York's Empire State Building is illuminated at sunset in the colors of the British flag in honor of Princess Diana Thursday, Sept. 4, 1997. (Right) In a horrific sequence of destruction, terrorists crashed two planes into the World Trade Center causing the twin 110-story towers to collapse on September 11, 2001.



Left) The Statue of Liberty and the New York skyline frame warships and smaller craft for Operation Sail in this helicopter view on Saturday, July 3, 1976. (Right) Thick smoke billows into the sky from the area behind the Statue of Liberty, lower left, where the World Trade Center towers stood, on Tuesday, September 11, 2001. The towers collapsed after terrorists crashed two planes into them.



(Left) A destroyed subway station near ground zero on the evening of September 12, 2001 after the September 11 terrorist attacks on the World Trade Center in New York City.(Right) Pedestrians walk along Church St. in lower Manhattan, Aug. 4, 2011 in New York. Behind them is the tower known as Four World Trade Center.



(Left) Emergency workers at ground zero on September 11, 2001 after the terrorist attacks on the World Trade Center in New York City.(Right) Pedestrians walk along Church St. past Century 21 clothing store in lower Manhattan, Aug. 4, 2011, in New York.



(Left) Medical and emergency workers, who are standing in front of the Millennium Hilton, look towards where the World Trade Center towers used to be, after a terrorist attack on the twin towers of lower Manhattan. (Right) Pedestrians pass the Hilton Hotel on Church St. in lower Manhattan, Aug. 4, 2011, in New York.



(Left) The World Trade Center destruction is shown in the aftermath of the September 11 attacks in New York. (Right) The tower known as Four World Trade Center is under construction in lower Manhattan, Aug. 9, 2011 in New York.



(Left) The World Trade Center destruction is shown in the aftermath of the September 11 attacks in New York. (Right) The tower known as Four World Trade Center is under construction in lower Manhattan, Aug. 9, 2011 in New York.



(Left) The south tower starts to collapse as smoke billows from both buildings of the World Trade Center in New York. (Right) The skyscraper known as One World Trade Center rises in the lower Manhattan skyline, Aug. 4, 2011 in New York.



(Left) Smoke rises into the sky following the collapse of World Trade Center Towers in New York. (Right) The skyscraper known as One World Trade Center rises in lower Manhattan, Aug. 10, 2011 in New York.


Share your thoughts ... thanks.. :)