Monday, October 14, 2013

சச்சின் - 200 Thanks for ALL

சச்சின் - 200  Thanks for ALL




சச்சின் அது 1996 அல்லது 97 இன்னு நினைக்குறேன்... சண்டே வேலை இல்லாம பக்கத்துல ஒரு ஆபீஸ் ல டிவி பக்க போனேன்.அவங்க டிவி ல கிரிக்கெட் பார்த்துட்டு இருந்தாங்க.வேல வழியே இல்லாம நானும் அத பார்த்தேன். அவங்க ரொம்ப ரசிச்சு பார்த்தாங்க.. நான் ஒன்னும் புரியாம பார்த்தேன்... அன்னிக்கு தன பிரஸ்ட் டைம் சச்சின் விளையாடுறத நான் பார்த்தது... அந்த மேட்ச் ல அவர் 8 /. 9 century  அடிச்சார்.அதுக்கு அப்புறம் நான் வளர வளர .. கிரிக்கெட் அப்டியே என்னோட ஊறி போய்டுச்சு..

நான் 10 வயசுல பார்த்தப்ப அப்படி ஆடுன சச்சின்... இனிக்கு நான் கிரிக்கெட் ஆடி  வீட்டுல இருக்கும் பூத்து கூட அவர் விளையாடுறத பார்க்கும் போது... வாவ் .. he  is really  master  of  cricket.

என்ன மாற்றி எந்தனையோ பேருக்கு கிரிக்கெட் மேல  ஆசை வர வச்ச சச்சின் தனது 200 டெஸ்ட் மேட்ச் முடிச்சு RETIREDஆகுறார் நு நினைக்கும் போது...
SACHIN ... We miss u badly.

அதுவும் அவர வற்புறுத்தி அப்படி செய்ய வைக்கும் போது.. அவர் உலக கோப்பை முடித்ததும்  RETIRED ஆகி இருக்கலாம்.ஆனா இப்பவும் எனக்கு சச்சின் கேக்குறது தான் உறுத்துது.

"I DONT KNOW WHAT TO DO OTHER THAN CRICKET -- After retirement " 
                                                                                                                  -  -  SACHIN.





10 வயசுல இருந்து கிரிக்கெட் கிரிக்கெட் இன்னு இருதவர் இப்படி ஆனா உண்மையாலுமே எனக்கே தெரில... அவர் என்ன பண்ணுவார்.. கிரிக்கெட் ல இருந்து  retired ஆகி?

Surely Cricket gonna miss SACHIN so much :Pஇனிக்கு கிரிக்கெட் சிறந்த பிசினஸ் ஆகிட இந்த காலத்துல சச்சின் இப்படி வற்புறுத்தி வெளிய அனுப்புறது எனக்கு பிடிக்கல.. பாக்கலாம் இனி இந்திய எப்படி ஆட போகுது.

நிறைய திறமையான வீரர்கள் இந்திய ல இருகாங்க... ஆனா அவங்கள எல்லாம் பண முதலைகள் விலைக்கு வாங்கி அவங்கள தான் அடியலா வசுகுவங்கலோனு வருத்தமா இருக்கு..

Any way Sachin ... thanks for your shots... thanks for your entertainment.. thanks for your cricket.... thanks for everything... 

MISSING U SO MUCH...


By your Fan...
S.Mohammed Arafath


Your comments are welcome .... share ur thoughts too ....




Thursday, June 6, 2013

இந்திய அணியின் வாய்ப்பு: சாம்பியன்ஸ் டிராபி



இந்திய அணியின் வாய்ப்பு: சாம்பியன்ஸ் டிராபி

ஒரு  வழியாக IPL கிரிக்கெட் முடித்து இன்று இந்திய அணி சாம்பியன் கோப்பையில் ஆடுகிறது.அது பற்றி ஒரு அலசல்.



ஐபிஎல். சூதாட்ட விவகாரம், தோனியின் வணிக நலன்கள் குறித்த சர்ச்சை, ஸ்ரீனிவாசன் விவகாரம் என்று சர்ச்சைச் சுழலில் சிக்கித் தவிக்கும் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் சற்றே கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இல்லை இது. ஆனாலும் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் இந்தத் தொடரில் இந்தியா தன் புதுமுகங்களுடன் நிரூபிக்க வேண்டியுள்ளது. 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணிக்கான பரிசோதனை அணியே இது. ரெய்னா, ரோகித் சர்மா, விஜய், தவான், கார்த்திக் ஆகியோருக்கு இந்திய அணியில் நிரந்தர இடம்பெற அருமையான வாய்ப்பு.

நாளை பலமான தென் ஆப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது. பயிற்சி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 330 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கை கோலியும், தினேஷ் கார்த்திக்கும் ஒன்றுமில்லாமல் செய்தனர். அந்த போட்டியில் இந்திய பந்து வீச்சு மிகவும் பலவீனமகா இருந்தது.


ஆனால் நேற்று ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் உமேஷ் யாதவ் அதிவேகத்தில் வீச, இஷாந்தும் விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்திய பந்து வீச்சு மீது புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

இந்திய டாப் ஆர்டர் பேட்டிங்கில் அனுபவமின்மை சற்றே உள்ளது. ஷிகர் தவானை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். முரளி விஜய் எப்படி ஆடுவார் என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை. ஆனால் தினேஷ் கார்த்திக், கோலி அபாரமாக ஆடி வருகின்றனர்.

மற்றபடி ரெய்னா தனது ஷாட் பிட்ச் பந்து குறித்த பயத்தை விட்டொழிக்கவேண்டும். நேற்றும் அவர் ஷாட் பிட்ச் பந்தை எதிர்பார்த்து சாதாரண நேர் பந்தில் பவுல்டு ஆனார். ரோகித் சர்மாவுக்கு எந்த பந்தை ஆடாமல் விடுவது என்பதில் சிக்கல் உள்ளது.

இந்த சாம்பையன்ஸ் டிராபியில் இந்தியா சவாலான தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா அன்று பாகிஸ்தானுக்கு எதிராக படு மோசமாக மண்ணைக் கவ்வியது.

 

பாகிஸ்தானின் பந்து வீச்சு புதிய பைர்மாணத்தில் அபாரமாக விளங்குகிறது.

இப்போதைய இங்கிலாந்து நிலைமைகள் ஸ்விங்கிற்கு பெருமளவு ஆதரவாக இருக்காது. ஏற்கனவே பிட்ச்கள் ரன்களை வழங்கும் பிட்சாக இருப்பதையே கண்டிருக்கிறோம். முதலில் பேட் செய்யும் அணி முதல் 20 ஓவர்களை ஜாக்கிரதையாக ஆட வேண்டியுள்ளது. துரத்தல் சுலபமாக உள்ளதை பயிற்சி ஆட்டங்களில் கண்டு வருகிறோம்.

எனவே டாஸ் ஒரு முக்கிய திருப்பமாக அமையும். சரியான அணிச் சேர்க்கைதான் தோனியின் கவலை. குறிப்பாக இர்பான் பத்தானை சேர்ப்பதா அல்லது ரவீந்திர ஜடேஜாவா என்பது பெரிய குழப்பம்தான்.

பந்து வீச்சில் எப்படியும் புவனேஷ், உமேக் யாதவ் இடம்பெற்றேயாகவேண்டும். இஷாந்தையும் ஒதுக்கி விட முடியாது. அஷ்வினுக்கு இங்கிலாந்து பிட்ச்களில் சுழல் வாய்ப்புகள் குறைவே. அவர் தனது பரிசோதனைப் பந்துகளை வீசி அது எடுபடாமல் போனால் அடி வாங்குவார்.

எனவே ஜடேஜாவை அஷ்வினுக்குப் பதிலாக அணியில் வைத்துக் கொண்டு இர்பானை அணியில் எடுப்பது நல்லது.

ஷிகார் தவான், ரோகித் சர்மா துவக்க, கோலி, கார்த்திக், ரெய்னா, தோனி, இர்பான் பத்தான், ரவீந்தர் ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார், அஷ்வின் அல்லது இஷாந்த் என்று அணிச் சேர்க்கை இருப்பது சிறந்தது.

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா 2000ஆம் ஆண்டு கென்யாவில் இறுதிவரை வந்து நியூசீ.யிடம் தோல்வி தழுவியது. பிறகு இலங்கையில் 2002ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது. அதன் பிறகு இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி ஆட்டங்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.


சேவாக், கம்பீர், சச்சின், ஜாகீர் கான், யுவ்ராஜ் என்று எந்தத் தலைகளும் இல்லாத புதிய அணி இந்திய அணி. தோனியின் திறமையை நம்பி களமிறங்குகிறது.

டேல் ஸ்டெய்ன் நாளை ஆடுவது சந்தேகமாகியுள்ளது. இந்தியாவுக்கு இது ஒரு பெரிய ரிலீஃப்.

மற்ற அணிகளில் பாகிஸ்தான், நியூசீலாந்து பலமாக உள்ளது.

எப்படியும் அரையிறுதி வரை இந்தியா நுழைய வாய்ப்பிருப்பதாகவே படுகிறது.

கோப்பையை வெல்ல இந்திய அணியை ஆதரிப்போம். பெஸ்ட் ஆஃப் லக் இந்தியா! 

Saturday, November 10, 2012

Need Education loan:? Its easy now :கல்வி கடன் வேண்டுமா? இப்பொழுது சுலபம்

கல்வி கடன் வேண்டுமா? இப்பொழுது சுலபம்.

ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!
கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க ஒரு மாணவன் வங்கியில் காத்திருக்கிறான். வங்கி மேலாளர் அழைத்துக் கேட்கிறார். 'உன் அப்பா ஒரு கூலித் தொழிலாளி. உங்களுக்கென்று ஒரு சொந்த வீடுகூட கிடையாது. எப்படி உன்னிடம் இருந்து நான் கடனை வசூலிப்பது?'' ''வசதி இருந்தா நாங்க எதுக்குசார் கடன் கேட்டுவர்றோம்?''- இது மாணவனின் பதில். கடைசிவரை மாணவர்களுக்குப் போராட்டம் மட்டுமே மிஞ்சுகிறது. இப்படிக் கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவே போராடிக்கொண்டு இருக்கிறது E.L.T.F (EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படை. வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்திவருகிறார்.

அவரிடம் பேசினோம். '' கல்விக் கடன் வாங்குவதற்காக மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு எனக்குத் தெரியும். அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னுதான் இந்த அமைப்பைத் தொடங்கினேன். கல்விக் கடனைப் பொறுத்தவரை இரண்டு திட்டங்கள்தான் நடைமுறையில் இருக்கின்றன. ஒன்று பொதுத் திட்டம். மற்றொன்று தனிப்பட்ட கடன் திட்டம்.

பொதுத் திட்டமானது மதிப்பெண் அடிப்படையில் சேரும் மாணவர்களுக்குப் பொருந்தும். மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்களுக்குத் தனிப்பட்ட கடன் திட்டம். கல்விக் கடன் வாங்கும் எல்லோருமே பொதுவாகத் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்களைச் சொல்கிறேன். கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென்றால், வங்கி மேலாளர்கள், அவர்களுடைய உயர் அதிகாரிகளின் அனுமதியின் பேரில்தான் நிராகரிக்க முடியும். நிராகரிப்பதற்கான காரணங்களையும் எழுத்து மூலம் மாணவர்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டதாகக் கருதினால், மாணவர்கள் வங்கியின் தலைவரிடமே மேல் முறையீடு செய்யலாம்.

கல்விக் கடன் வாங்கும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்தவேண்டியக் கட்டாயம் இல்லை. அது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. தொழிற்கல்வி மற்றும் மேலாண்மைக் கல்வி படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசின் வட்டிக்கான மானியமும் உண்டு. இதற்கான விண்ணப்பத்தைக் கல்விக் கடனில் முதல் தவணை பெறும்போதே, வருமானச் சான்றிதழை இணைத்துக் கொடுத்துவிட வேண்டும். பெற்றோர்களின் எந்தவொரு தனிப்பட்ட கடனுக்கும் அவர்களுடைய பிள்ளைகளின் கல்விக் கடனுக்கும் சம்பந்தமில்லை.

ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை. பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். எங்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறோம்.(www.eltf.in )

எங்கள் அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் 560 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்து இருக்கிறோம். கல்விக் கடன் கிடைக்காம கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும். நாங்களே தேடிவந்து உதவிகள் செய்து தருவோம்'' என்கிறார்.

கல்வி கற்க இனி என்ன கவலை?

சில வேலைகளால் என்னால் பதிவு போட முடியவில்லை.இனி தொடர்ச்சியாக முயற்சி செய்கிறேன்.எனக்கு அதரவு அளிக்கும் அவனிவரும் நன்றி... மீண்டும் தொடர்வதால் ஒரு உபயோகமான பதிவு... நன்றி...

Thursday, March 15, 2012

India's powerful Business womens

இந்தியாவின் சிறந்த பெண் தொழில் அதிபர்கள்.

முழுக்க முழுக்க ஆண்களினால் கையாளப்படும் இன்றைய வியாபார உலகில் நாம் இங்கு சில பெண்கள் மிகுந்த போராட்டம் , கஷ்டங்களுக்கு நடுவில் வியாபாரத்தில் இந்த உச்ச நிலையை அடைத்து உள்ளனர்.



Name: Vinita Bali

Role: Managing Director
Company: Britannia Industries


Vinita has always made unconventional decisions. Rising prices of wheat, sugar and dairy products affect her as much as they do every housewife.

Name: Kiran Mazumdar Shaw
Role: Chairman and Managing Director
Company: Biocon India



Kiran is India’s bio-tech queen. She says in a an interview to Forbes India that she learnt the importance of self-reliance and personal re-invention at an early age. From starting of with Rs 10,000 in a garage her company Biocon is today worth Rs. 1,511 crore.

Name: Mallika Srinivasan
Role: Chairman and CEO
Company: TAFE



Mallika believes in a no-frills working style. She has risen to become India's tractor woman making an indelible impression in a heavily male-dominated industry. TAFE's turnover, a mere Rs86 crore in 1985 - the year she joined - had risen to Rs5,800 crore by 2010/11

Name: Chanda Kochhar
Role: Managing Director and Chief Executive Officer
Company: ICICI Bank Limited



Chanda began her career with ICICI as a Management Trainee in 1984 and has thereon successfully risen through the ranks by handling multidimensional assignments and heading all the major functions in the Bank at various points in time.

Name: Neelam Dhawan
Role: Managing Director
Company: Hewlett-Packard India


Neelam has been an icon for women in the IT industry. There were just a handful women in the industry way back in the early 80s when she began her career accidentally at HCL.

Name: Preetha Reddy
Role: Managing Director
Company: Apollo Hospitals


Preetha has been instrumental in the group's quality certification process (ISO 14001 and 9001). As a trailblazer, she ensured the JCI accreditation process in five of the group hospitals in Delhi, Chennai, Hyderabad, Ludhiana and Dhaka. Apollo Hospitals group is India's largest healthcare company.


Name: Shobhana Bhartia
Role: Chairperson and Editorial Director
Company: Hindustan Times Media



Shobhana, a nominated member of the Rajya Sabha, also runs one of India's largest media houses. HT Media made revenues of Rs 1,815 crore in 2010/11.

Name: Ekta Kapoor
Role: Joint Managing Director and Creative Director
Company: Balaji Telefilms



Ekta has created a niche for herself as the queen of the silver screen soaps. She rules almost every television network.


Tuesday, March 6, 2012

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 11

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 11



ரஹ்மான ஒரு ப்ளூ பேபி யாகத்தான் பிறந்தார். குழந்தை பிழைக்குமா என்பதே பெரிய கேள்வியா இருந்தது. அப்பா ரொம்ப டென்ஷன் நா இருந்தார். எப்படியோ குழந்தை உயிர் பிழைத்தது. அப்பா முகத்துல பெரிய நிம்மதி. குழந்தை வளர வளர அதுகிட்ட பெரிய இசைத்திறமை இருந்தததை பார்த்தவர், மிகுந்த உற்சாகம் ஆனார். தம்பிக்கிட்ட எப்பவும் ஒரு ஸ்பெஷல் அக்கறை காட்டுவார். தன்னோடு ரெகார்டிங் ஸ்டுடியோ எல்லாம் கூட்டிட்டு போய் இசை உலகத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனா எந்த பாரபட்சமும் கட்டாமல் என்னையும் ரகுமானையும் ஒரே நேரத்தில் பியானோ, கிடார் வகுப்புகள் ல பைலட் எட்வின் , தன்ராஜ் மாஸ்டரிடம் சேர்த்துவிட்டார். நாங்க வாசிப்பதையும் பாடுவதையும் ரொம்ப ரசிச்சு கேட்பார். அப்பெல்லாம் பாட்டும் கூத்துமாஎங்க குடும்பமே ரொம்ப ஜாலியாக இருப்போம். எங்க எல்லாருக்குமே அப்பான்னாரொம்பப் பிடிக்கும். அவர் தந்தது தானே எல்லாமே.

"அற்புதமான வாழ்க்கை அப்பா திடீர்னு இறந்து போனதும் ஸ்தம்பித்து போய்ட்டோம்." என்று அந்த நினைவலைகளில் ஆள்கிறார் ரைஹனா.

அதற்கு பிறகு என்ன ஆனது.?




ஆர்.கே.சேகரின் சமகால மலையாள இசையமைப்பாளர் அர்ஜுனன் மாஸ்டர் இப்போது கேரளாவின் கோட்டயத்தில் தன 73 ஆம் வயதிலும் சுறுசுறுப்பாக திரைப்பட இசை வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார். குரல் லேசாக தடுமாறினாலும் பழைய நிகழ்வுகளை அவர் தன இதயத்திலேயே வைத்திருக்கிறார்.

உண்மையிலேயே ரஹ்மானுடைய அம்மாவை ஒரு தீர்க்க தரிசினு தான் சொல்லணும். சேகர் இறந்த பொது திலீப் ரொம்பச் சின்ன பையன். ஆனா, அப்பவே என்னைப் போன்ற மியூசிக் டைரக்டர் களை எல்லாம் சந்திச்சு, என் மகனுக்கு இசை வாய்ப்பு கொடுங்க. அவன் கிட்ட பெரிய திறமை இருக்குன்னு சொல்லுவாங்க. "எங்க சேகர் பையனாச்சே மா .. நீங்க இவ்வளவு தூரம் சொல்லனுமா..? உடனே திலீப் பை வரச் சொல்லுங்கமா நு நாங்களும் சொல்லுவோம். அற்புதமா கி போர்டு வாசிப்பான். மியூசிக் இன்ச்ற்றுமென்ட் ல வர ரிப்பேர் எல்லாம் திலீப் ரொம்ப ஈஸி யாச் சரிபண்ணிடுவான். அவனை கி போர்டு வாசிக்க வைகலாமேன்னு தோனுச்சு. ஆனா ரொம்ப சின்னப் பையனா இருக்கானேன்னு யோச்சிசோம். வாய்ப்பு கொடுத்த பொது பொளந்து கட்டினான். அப்ப தான் அவன் ஒரு மியூசிக் கல் மேதை என்பது எங்களுக்கு புரிஞ்சது. எங்களுக்கு முன்னாடியே அந்த உண்மை, அவன் அம்மாவுக்குப் புரிஞ்சதுதான் அற்புதமான விஷயம். அப்ப நாங்க திலீப் கொடுத்தது ரொம்பச் சொற்பமான சம்பளம். எதுவுமே சொல்லாம புன்னகையோடு அந்தத் தொகையை வாங்கிட்டுப் போகும் அந்தப் பையன். அந்த அமைதியும் மசியுரிட்டி தான் ரஹ்மான்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கு.


தொடரும்..
உங்கள்கருத்துக்களைபகிரவும் ... நன்றி...