Tuesday, August 23, 2011

10 Most Corrupt Indian Politicians :இந்தியாவின் ஊழல் தலைவர்கள்.

10 Most Corrupt Indian Politicians
இந்தியாவின் ஊழல் தலைவர்கள்.

While everyone has been animatedly supporting Anna Hazare's fight against corruption, people seem to have forgotten who the people are who actually led to this situation. The peak of irony was when Anna was, allegedly, lodged in the same jail that housed the people who were responsible for two of the biggest scams in the country ever. How must the authorities have felt when they saw Raja and Kalmadi fill their plates while Anna was on a fast because of their misdeeds?
Corruption has become an unavoidable part of politics and every now and then, one or the other politician re-affirms this fact. Here is our pick of the 10 most corrupt politicians of India.



01. Suresh Kalmadi



Suresh Kalmadi, almost single handedly caused a loss of hundreds of crores of rupees to the country. The Commonwealth Games, organized by Kalmadi was no less than a loot with numerous reports of the magnum opus event being soaked in corruption making headlines way before the Games had even started. Apparently, out of Rs. 70000 crores spent on the Games, only half of the amount was actually spent. Owing to his involvement in the scam, Kalmadi was charged with corruption and sent to Tihar jail.



02. A. Raja



A scam worth Rs. 176,000 crore had former Union Cabinet Minister for Communications and Information Technology, Andimuthu Raja at the centre. A. Raja as he is generally called, was the prime accused in the 2G spectrum scam, which was the largest that the country had seen in a long time. Following the shocking exposure, Raja was indicted and forced to resign. Presently, he is too has been lodged at the Tihar jail and is awaiting his trial.



03. Mayawati



Mayawati has always been criticized for ostentatious display of power in her state. She has allegedly used her status as chief minister to amass large amounts of personal wealth. She was charged with corruption when the Taj Heritage Corridor Case was uncovered. Mayawati's birthdays have always been media events, where she usually appears decked in diamond jewellery and also accepts public donations for which, she often comes under fire. Her assets are worth millions of dollars and in the year 2007-08, she had paid an income tax of Rs. 26 crores, which placed her amongst the top 20 taxpayers of the year.



04. Lalu Prasad Yadav



The fact that Lalu Prasad Yadav has been an accused in 63-odd cases serves for the fact that Lalu stands as one of the strongest competitor in the list. The biggest scam that rocked Lalu's political career was the fodder scam which involved the embezzlement of Rs. 950 crore approximately. The accusation of nepotism against him has come up time and again but hardly any action has been taken against him owing to his 'connections' in the government.



05. Madhu Koda



Former Jharkand Chief Minister, and only the third independent legislator to assume the office of chief minister in India, Madhu Koda was responsible for a scam worth over Rs. 4000 crore. The man exploited the state's natural resources by licensing illegal mining leases and stashing away the wealth amassed during the undertaking. Furthermore, the Maoists received a 30% share of the booty. Koda was arrested on charges of money laundering and is still in prison following the rejection of numerous bail applications.



06. Mulayam Singh Yadav



Former Jharkand Chief Minister, and only the third independent legislator to assume the office of chief minister in India, Madhu Koda was responsible for a scam worth over Rs. 4000 crore. The man exploited the state's natural resources by licensing illegal mining leases and stashing away the wealth amassed during the undertaking. Furthermore, the Maoists received a 30% share of the booty. Koda was arrested on charges of money laundering and is still in prison following the rejection of numerous bail applications.



07. Karunanidhi



The corruptions charges against M. Karunanidhi are so many that he is often referred to as the king or emperor of corruption. He was accused of lending support to the LTTE and was indicted for abetting the LTTE in the interim report which oversaw the investigation into Rajiv Gandhi's assassination.

Karunanidhi reportedly institutionalized corruption in the South. He was a leading player in the cash for votes scams that are common in the southern region, as well as notorious foe extreme nepotism shown under his rule. Not so surprising, is the fact that the main accused in the 2G scam, A, Raja, considers him to be his mentor.



08. Sharad Pawar



Very few people can miss the cosy relationship that Sharad Pawar shares with power and money.Every now and then, Pawar draws flak for alleged investments made by him and his family in various illegal projects. He was named by Abdul Karim Telgi, during a narcoanalysis test, stating that it was Pawar's brainchild to print fake stamp papers across the country and mint money. He was also accused in a multi-crore scam involving wheat imports and institutions headed by him and his close associates were served notices by the Bombay High Court for showing favoritism to his family.



09. Jayalalithaa



The Chief Minister of Tamil Nadu has a staggering 46 corruption cases against her. Amongst the various scams were the Rs. 70 million coal import scam, Tansi land deal case, case of disproportionate assets and colour TV case, amongst many others. A raid in her residence and business establishments led to the seizure of some 28 kg of jewellery (worth Rs 51 crore), 91 wrist-watches, 41 air-conditioners, 10,500 sarees, 750 pairs of footwears, etc. She along with her former cabinet colleagues and senior bureaucrats who worked with her are still facing investigation with regard to corruption.


10. BS Yeddyurappa




The most recent politician to be caught in the web of corruption is former Chief Minister of Karnataka, B. S. Yeddyurappa. While he has a number of corruption lying against him, the one that toppled his career was his alleged involvement in the illegal iron ore export scam in districts of Karnataka. A lot of blame game followed and ended up with Yeddyurappa losing his ministerial post last month. Despite his denial, his image as one of the most corrupt politicians of the country will not fade anytime soon.


share ur views n thoughts .. thanks you

Sunday, August 21, 2011

தங்கம் இனி நமக்கு கனவா???

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு;
பவுன் ரூ.20 ஆயிரத்தை தாண்டியது.



தங்கம் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ரெக்கை கட்டி பறக்கத்தான் செய்கிறது. பங்குச்சந்தை வீழ்ச்சி எதிரொலி, அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சியே தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆகும்.

இதனால் பலரும் தங்கள் பணத்தை தங்கத்தின் மீது அதிகமாக முதலீடு செய்ய தொடங்கி விட்டனர். ஆபரணத்திற்காக தங்கம் என்று இல்லாமல் சிறந்த சேமிப்பு என்று பலரும் தங்கத்தை கருத தொடங்கியதால் தங்கம் விற்பனை படுவேகமாக சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது.

நிலத்தில் பணத்தை கொட்டி முதலீடு செய்பவர்கள் கூட இப்போது நாளுக்குநாள் விலையேறும் தங்கத்தின் மீது பணத்தை கொட்ட தொடங்கியிருக்கிறார்கள். 2009-ம் ஆண்டு முதல்முறையாக ஒரு பவுன் ரூ.10 ஆயிரத்தை கடந்து, விற்பனையாகியது.

அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆயிரத்து 332 ரூபாய்க்கு விற்பனையானது. 2010-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் 12 ஆயிரத்து 784-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி பவுன் தங்கம் 16 ஆயிரம் ரூபாயை கடந்தது.

கடந்த மே மாதம் 28-ந்தேதி அன்று 17 ஆயிரம் ரூபாயை கடந்து, பவுனுக்கு 17 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 3-ந்தேதி அன்று ரூ.18 ஆயிரத்தை கடந்து 18 ஆயிரத்து 112 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்பிறகு ஒவ்வொரு நாளும் ஜெட் வேகத்திலே தங்கம் விலை உயர்ந்து வந்தது. 5 நாட்களிலேயே (கடந்த 9-ந்தேதி அன்று) முதல்முறையாக 19 ஆயிரம் ரூபாயை கடந்து, 19 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையானது.



இப்போது ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 491 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுன் தங்கம் 19 ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில், நேற்று ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 504 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.104 அதிகரித்து, 20 ஆயிரத்து 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது வரலாறு காணாத விலை உயர்வு ஆகும்.

இதன் மூலம் தங்கம் புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. தங்கத்தின் இந்த வரலாறு காணாத விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களையும், பெண்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தங்கம் இனி வாங்க முடியுமோ என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் எழுப்பியுள்ளது. தங்கம் ஏழைகளுக்கு எட்டாக் கனியாகிவிட்டது.

எனினும் தங்கத்தின் மீதான மோகம் இந்திய பெண்களுக்கு அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு பெண்களுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருமணங்கள் தங்கத்தை வைத்தே நிர்ணயிக்கப்படுவதால் பெண்பிள்ளையை பெற்று எடுத்த ஏழைமக்கள், "தங்கள் பிள்ளையை எப்படி கரைசேர்ப்பது'' என்று விழிபிதுங்கி உள்ளனர்.

தங்கம் என்று இனி பெயர்சூட்டிதான் அழகுபார்க்கமுடியுமே தவிர ஆபரணமாக சூட்டி அழகுபார்க்க முடியாது என்று பொதுமக்கள் ஏக்கத்துடன் கூறி வருகின்றனர். தங்கத்தின் இந்த வரலாறு காணாத விலை உயர்வு குறித்து தங்க நகை விற்பனையாளர்கள் கூறியதாவது:-

தமிழ் மாதங்களான ஆனி, ஆடி மாதங்கள் தங்க விற்பனை ஓரளவு சுமாராக நடைபெற்றது. ஏனெனில் இந்த மாதங்கள் சுபகாரியங்கள் செய்வதற்கு ஏற்ற மாதங்கள் இல்லை என்று கருதப்பட்டு வருவதால் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வந்தது. தற்போது ஆவணி மாதம் பிறந்துவிட்டது.

இந்த மாதம் சுபமுகூர்த்த மாதம் என்பதால், திருமணம் மற்றும் விழாக்களுக்காக தங்கம் வாங்குபவர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அதிகப்படியான தங்கத்தை இறக்குமதி செய்யவேண்டிய நிலை உள்ளது. எனவே தங்கம் விலையில் ஏற்றம் இருக்குமே தவிர இறக்கம் இருக்க வாய்ப்பில்லை

எனவே தங்கம் என்பது இனி வீட்டில் எழுதி தான் பார்க்க வேண்டும் போல..அது நடுத்தர வர்க்கத்துக்கும் ஏழைமக்கள் வாங்க முடியாமல் வெறும் கனவாக ஆகிவிடும் போல உள்ளது...

நன்றி .. உங்கள் கருத்துகளை பகிரவும்...

Thursday, August 18, 2011

பத்மநாபசுவாமி கோயில் - மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கியா?

பத்மநாபசுவாமி கோயில் - மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கியா?




ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்திய மக்கள் இழந்தது ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ரூபாய். வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில்லாமல் கருப்பு நிறத்தில் குவிந்திருக்கும் இந்தியப் பணம் ஒன்பது லட்சம் கோடி ரூபாய். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் குவிந்துள்ள சொத்துக்களின் மதிப்பு ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாய். அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும், மத நிறுவனங்களும் நம் மக்களைச் சுரண்டி குவித்த பணம். இதே இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் மாத வருமானம் இன்னும் ஆயிரம் ரூபாயைத் தாண்டவில்லை.


சில நாட்களுக்கு முன்பு மறைந்த பணக்கார சாமியரான சாயிபாபாவின் புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில், அவருடைய பிரத்யேக அறையான யஜூர் வேத மந்திர் திறக்கப்பட்டபோது மக்கள் அடைந்த அதிர்ச்சி நினைவுக்கு வருகிறது. பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுகள், கிலோ கிலோவாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சிக்கின. ஆனால் அந்த அதிர்ச்சியை ஒன்றுமில்லாமல் மறக்கடிக்கச் செய்துள்ளது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில். மிகப்பழமையான திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் தற்போது புதிய வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் மீடியாக்களின் கவனம் இப்போது இந்தக் கோயிலின் மீதே குவிந்துள்ளது. வைணவர்கள் போற்றும் நூற்றியெட்டு திவ்விய தலங்களில் ஒன்றான இந்தக் கோயிலின் பாதாள அறைகளில் தற்போது அள்ள அள்ளத் தங்கமும், வைரமும் கொட்டுகின்றன. இது போன்ற புதையல் அதிசயங்களை இதுவரை "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" போன்ற திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த நம் மக்கள் வாயைப் பிளந்து நிற்கின்றனர்.



அனந்தன் எனும் பாம்பின் மீது திருமால் பள்ளி கொண்டிருப்பதாலேயே திருவனந்தபுரம் எனும் பெயர் பெற்ற இந்த தலத்தில் பழம்பெரும் சேரர் குலத்தைச் சேர்ந்த சேரமான் பெருமான் எனும் மன்னன்தான் இந்தக் கோயிலை முதன்முதலாக எழுப்பியதாக வரலாறு சொல்கிறது. அதற்குப் பின்னர் இந்தக் கோயிலின் சொத்துகளையும் நிர்வாகத்தையும் "எட்டு வீட்டில் பிள்ளைமார்" எனும் உயர் சாதியைச் சேர்ந்த அதிகாரம் மிக்க ஜமீன்தார்கள்தான் தங்கள் கைகளில் வைத்துள்ளனர்.


பதினெட்டாம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னரான ராஜா மார்த்தாண்ட வர்மா, இந்தப் பிள்ளைமார்களின் வம்சத்தைப் போர் மூலம் தோற்கடித்து தன்னுடைய ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார். அத்துடன் கோயிலையும் புதுப்பித்தார். கடைசியில் மார்த்தாண்ட வர்மா தன்னுடைய அரச பதவியை பத்மநாபசுவாமியிடம்(?) ஒப்படைத்து இறைப்பணியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதாகக் கூறுகிறார்கள். அதற்குப் பின்னர் இந்தக் கோயிலின் சொத்துக்கள் அனைத்தும் அரச பரம்பரையின் வசமே இருந்து வந்துள்ளன.



இக்கோயிலின் கணக்கில்லாத சொத்துகளை இஸ்லாமியர் உள்ளிட்ட அன்னியப் படையெடுப்பாளரிடமிருந்து காப்பாற்றுவதற்காக கோயிலில் ஆறு பாதாள அறைகளை உண்டாக்கி அவற்றில் இச்செல்வங்களை வைத்துப் பராமரித்துள்ளனர். குறிப்பாக திப்பு சுல்தானிடமிருந்து பாதுகாப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக அரச பரம்பரையினர் கூறுகின்றனர். கோயிலின் மூலவரான அனந்த பத்மநாபரின் சிலையே முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது. அவர் அணிந்திருக்கும் அணிகலன்கள் ஒவ்வொன்றும் (பூணுல் உட்பட) தங்கத்தால் ஆனவையே. காட்டுச் சர்க்கரை யோகம் எனும் வெளிப்பூச்சை சிலையின் மீது பூசி இஸ்லாமியரின் பார்வையிலிருந்து அது மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


கோயிலுக்குச் சொந்தமான இன்னும் ஏராளமான செல்வங்கள் கோயில் வளாகத்தில் உள்ள ஆறு பாதாள அறைகளில் மறைத்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கும் மேலாகத் திறக்கப்படாமல் இருந்து வந்த அந்தப் பாதாள அறைகள் திறக்கப்பட்டு அவற்றில் இருப்பவற்றை உலகறியச் செய்ய வேண்டுமென்று டி.பி.சுந்தரராஜன் எனும் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் இந்த வழக்கை எதிர்த்து மனு செய்தனர். ஆனால் அதனை நிராகரித்த உச்சநீதிமன்றம் அந்த அறைகளை ஒரு குழு அமைத்துத் திறக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி முன்னாள் நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த ஜூன் 27ம் தேதி தன்னுடைய ஆய்வைத் தொடங்கியது.


இந்தக் குழுவினரின் நடவடிக்கைப்படி கோயிலின் பாதாள அறைகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு அவற்றிலிருந்த விலை மதிப்பில்லாத சொத்துக்கள் கணக்கிடப்பட்டன. இந்தக் கணக்கு விபரங்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை அளிக்கின்றன. தங்கத்தாலான பெருமாள் சிலை, பெரும் மதிப்புள்ள வைர, வைடூரிய நகைகள், கிலோ கணக்கில் தூய தங்கத்தாலான நகைகள், தங்க நாணயங்கள் என ஒரு பெரும் புதையலே சிக்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி இதுவரை திறக்கப்பட்டுள்ள ஐந்து அறைகளில் கிடைத்துள்ள செல்வங்களின் மதிப்பு மட்டும் குறைந்த பட்சம் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. கோயிலைச் சுற்றி வரலாறு காணாத பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



கடைசியாக உள்ள ஆறாவது அறை இன்னும் திறக்கப்படவில்லை. இந்த அறை திறக்க முடியாத அளவுக்கு பலம் பொருந்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த அறையைத் திறப்பது ஆகமவிதிகளுக்கு முரணானது என்று கூறி அதைத் தடுக்கும் முயற்சியில் கோயில் நிர்வாகம் இறங்கியுள்ளது. அந்த அறை திறக்கப்படுவதை எதிர்த்து மன்னர் குடும்பம் உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியுள்ளது. அந்த அறை திறக்கப்பட்டால் அங்கு புதைந்திருக்கும் செல்வத்தின் மதிப்பு மேலும் சில புதிய அதிர்ச்சிகளை அளிக்க வாய்ப்புள்ளது. ஆறு அறைகளில் கடைசி இரண்டு அறைகள் கடந்த 136 ஆண்டுகளாகத் திறக்கப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது.


இக்கோயிலின் குளத்திலும் பெரும் புதையல் மறைந்திருக்கலாம் என்று கேரளாவைச் சேர்ந்த வரலாற்றறிஞர் பிரதாப் கிழக்கே மடம் கூறியுள்ளார். இக்கோயிலில் மொத்தம் ஒன்பது ரகசிய அறைகள் இருப்பதாகவும், தற்போது தெரியவந்துள்ள ஆறு அறைகள் தவிர, மேலும் மூன்று அறைகள் குளத்துக்குள் கிணறு வடிவில் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அந்தக் காலத்தில் நேபாளத்தில் உள்ள கண்டிகா ஆற்றிலிருந்து சாலகிராம் எனும் ஆயிரக்கணக்கான புனிதகற்கள் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு, அவற்றைக் கொண்டு பத்மநாபசுவாமி அனந்த சயனத்தில் இருப்பது போன்ற போன்ற மூலவர் சிலை செய்யப்பட்டது. பின்னர் எஞ்சியிருந்த கற்களும் நகைகளும் குளத்தில் உள்ள கிணறுகளில் போடப்பட்டன என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது உண்மையாயிருந்தால் இன்னும் ஒரு பெரும் அதிர்ச்சிக்கு நாடு ஆளாக வேண்டியிருக்கும்.



திருவனந்தபுரம் கோயிலைப் போன்றே திருவரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் பெரும் புதையல் இருக்கலாம் என்று திருச்சியைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கிருஷ்ணமாச்சாரியார் தெரிவித்துள்ளார். திருவரங்கக் கோயிலின் சொத்துகள், பிரெஞ்சு காரர்களின் படையெடுப்பிலிருந்து பாதுகாப்பதற்காக கோயிலில் உள்ள கருடன் சன்னதிக்கு பின்புறம் ரகசியமான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவற்றை வெளிக்கொணர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தவிர, திருச்செந்தூர் முருகன் கோயில், திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயில் போன்றவற்றிலும் இது போன்ற பெரும் புதையல் அன்னியர்களின் படையெடுப்பிலிருந்து பாதுகாப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பரபரப்பான தகவல்கள் கிளம்பிவிட்டன. இந்தியாவின் பணக்கார சாமியான திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் இது போன்ற பெரும் புதையல் மறைந்திருக்க வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது.
திருவனந்தபுரம் கோயிலில் தற்போது கிடைத்துள்ள சொத்துக்களுக்குப் போட்டியும் கிளம்பிவிட்டது. திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நகைகளும் இதில் அடங்கியிருப்பதாக அந்தக் கோயில் நிர்வாகம் கூறிவருகிறது.


அன்னியப் படையெடுப்பிலிருந்து கோயில் சொத்துக்களை மறைத்து வைத்துக் காப்பாற்றியதற்காக மன்னர் பரம்பரையினரைப் பாராட்டும் விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஆனால் இவ்வளவு செல்வம் கோயிலுக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி யாரும் வாய்திறக்க மறுக்கிறார்கள். இதெல்லாம் அந்த மன்னர் பரம்பரை உழைத்துச் சேர்த்த செல்வங்களாவோ அல்லது மக்கள் பக்தியுடன் கோயிலுக்கு அளித்த நன்கொடைகளாகவோ இருக்க வாய்ப்பில்லை. வரலாற்றின் வெளிச்சத்துக்கு வராத மன்னராட்சிக் காலத்தில் மக்களின் உழைப்பைச் சுரண்டி ஆளும் வர்க்கம் சேர்த்த செல்வங்களாகத்தான் இவை இருக்க முடியும். பத்மநாப சுவாமியை அலங்கரித்த ஒவ்வொரு ஆபரணத்துக்கும் பின்னால் எத்தனை ஏழை மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டிருக்கும் என்பதை நினைத்தால் நெஞ்சு கொதிக்கிறது. இந்தியாவில் மக்களின் உழைப்பைச் சுரண்டி முறைகேடாகச் சேர்த்த பணம் சுவிஸ் வங்கிகளில் குவிக்கப்படுவதைப் போல அந்தக் காலத்தில் சேர்க்கப்பட்ட செல்வங்கள் கோயில்களில் குவிக்கப்பட்டுள்ளன.


மக்களாட்சிக் காலத்தில் சுவிஸ் வங்கிகளில் சேர்ந்துள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து நாட்டின் வளர்ச்சிக்குச் செலவிட வேண்டும் எனும் கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. அதே போல் மன்னராட்சிக் காலத்தில் கோயில்களில் சேர்க்கப்பட்டுள்ள இது போன்ற "கருப்புச் செல்வங்களை"யும் கைப்பற்றி மக்கள் நலத்திட்டங்களுக்குச் செலவிட வேண்டும்.

கோயில்கள், ஆசிரமங்கள் போன்ற மத நிறுவனங்களின் சொத்துக்கள் வரைமுறைக்குட்படுத்தப்பட வேண்டும். தற்போது சிக்கியுள்ள செல்வங்களையும் இனி சிக்கப் போகும் சொத்துக்களையும் அரசின் கருவூலத்துக்குப் போய்ச் சேரும் வகையில் புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் கணக்கில் வராத கருப்பு பணம் கோயில்களிலும் ஆசிரமங்களிலும் நகைகளாகக் குவிவது இன்னும் பெருகும்.
ஒரு பவுன் தங்கம் வாங்க முடியாமல் கல்யாணக் கனவுகளைத் தள்ளிவைத்துக் காத்திருக்கும் ஏராளமான பேரிளம் பெண்களைக் கொண்ட நாட்டில் பத்மநாபசுவாமி சிலைக்கு இத்தனை அலங்காரம் தேவையா? இந்த செல்வங்கள் முழுவதும் தங்கள் வசமே இருக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கூறி வருகிறது. ஒரு கோயிலுக்கு எதற்கு இத்தனை சொத்துக்கள்? தங்க நகைகளுடன் மட்டுமே பக்தர்களுக்குக் காட்சி தருவேன் என்று அடம்பிடிக்கும் எந்தக் கடவுளும் கருணையுள்ளவராக இருக்க முடியாது.

நன்றி: கீற்று

உங்கள் கருத்துக்களை பகிரவும் நன்றி..:)

Monday, August 15, 2011

சுதந்திர தினம் : Independence Day

சுதந்திர தினம் : Independence Day



இன்று நாம் இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டுகின்றோம். நாம் மட்டும் அல்ல நம்மை போல பல நாடுகளும் மற்றவர்களிடம் அடிமையை தான் இருந்தன.இங்கு நாம் அப்படி அடிமையை இருந்த நாடுகளின் சுதந்திர நாட்கள் பற்றி இங்கு பார்போம்

660 BCE - Japan
221 BCE - China
301 CE - San Marino
843 CE - France
976 CE - Austria
10th Century CE - Denmark
1001 - Hungary
1143 - Portugal
1206 - Mongolia
1238 - Thailand
1278 - Andorra
August 1, 1291 - Switzerland
1419 - Monaco
15th Century - Spain
1502 - Iran
June 6, 1523 - Sweden
January 23, 1579 - Netherlands
1650 - Oman
May 1, 1707 - United Kingdom
January 23, 1719 - Liechtenstein



1768 - Nepal
July 4, 1776 - United States of America
January 1, 1804 - Haiti
July 20, 1810 - Colombia
Sept. 16, 1810 - Mexico
Sept. 18, 1810 - Chile
May 14, 1811 - Paraguay
July 5, 1811 - Venezuela
July 9, 1816 - Argentina
July 28, 1821 - Peru
Sept. 15, 1821 - Costa Rica
Sept. 15, 1821 - El Salvador
Sept. 15, 1821 - Guatemala
Sept. 15, 1821 - Honduras
Sept. 15, 1821 - Nicaragua
May 24, 1822 - Ecuador
Sept. 7, 1822 - Brazil
August 6, 1825 - Bolivia
August 25, 1825 - Uruguay
1829 - Greece



October 4, 1830 - Belgium
1839 - Luxembourg
February 27, 1844 - Dominican Republic
July 26, 1847 - Liberia
March 17, 1861 - Italy
July 1, 1867 - Canada
January 18, 1871 - Germany
May 9, 1877 - Romania
March 3, 1878 - Bulgaria
1896 - Ethiopia
June 12, 1898 - Philippines
January 1, 1901 - Australia
May 20, 1902 - Cuba
November 3, 1903 - Panama
June 7, 1905 - Norway
Sept. 26, 1907 - New Zealand
May 31, 1910 - South Africa
November 28, 1912 - Albania
December 6, 1917 - Finland



November 11, 1918 - Poland
December 1, 1918 - Iceland
August 19, 1919 - Afghanistan
December 6, 1921 - Ireland
February 28, 1922 - Egypt
October 29, 1923 - Turkey
February 11, 1929 - Vatican City
Sept. 23, 1932 - Saudi Arabia
October 3, 1932 - Iraq
November 22, 1943 - Lebanon
August 15, 1945 - Korea, North
August 15, 1945 - Korea, South
August 17, 1945 - Indonesia
Sept. 2, 1945 - Vietnam
April 17, 1946 - Syria
May 25, 1946 - Jordan
August 14, 1947 - Pakistan
August 15, 1947 - India
January 4, 1948 - Burma
February 4, 1948 - Sri Lanka



May 14, 1948 - Israel
July 19, 1949 - Laos
August 8, 1949 - Bhutan
December 24, 1951 - Libya
November 9, 1953 - Cambodia
January 1, 1956 - Sudan
March 2, 1956 - Morocco
March 20, 1956 - Tunisia
March 6, 1957 - Ghana
August 31, 1957 - Malaysia
October 2, 1958 - Guinea
January 1, 1960 - Cameroon
April 4, 1960 - Senegal
May 27, 1960 - Togo
June 30, 1960 - Congo, Republic
July 1, 1960 - Somalia
July 26, 1960 - Madagascar
August 1, 1960 - Benin
August 3, 1960 - Niger



August 5, 1960 - Burkina Faso
August 7, 1960 - Cote d'Ivorie
August 11, 1960 - Chad
August 13, 1960 - Central African Republic
August 15, 1960 - Congo, Dem. Rep. of the
August 16, 1960 - Cyprus
August 17, 1960 - Gabon
Sept. 22, 1960 - Mali
October 1, 1960 - Nigeria
November 28, 1960 - Mauritania
April 27, 1961 - Sierra Leone
June 19, 1961 - Kuwait
January 1, 1962 - Samoa
July 1, 1962 - Burundi
July 1, 1962 - Rwanda
July 5, 1962 - Algeria
August 6, 1962 - Jamaica
August 31, 1962 - Trinidad and Tobago
October 9, 1962 - Uganda



December 12, 1963 - Kenya
April 26, 1964 - Tanzania
July 6, 1964 - Malawi
Sept. 21, 1964 - Malta
October 24, 1964 - Zambia
February 18, 1965 - Gambia, The
July 26, 1965 - Maldives
August 9, 1965 - Singapore
May 26, 1966 - Guyana
October 4, 1966 - Lesotho
November 30, 1966 - Barbados
January 31, 1968 - Nauru
March 12, 1968 - Mauritius
Sept. 6, 1968 - Swaziland
October 12, 1968 - Equatorial
June 4, 1970 - Tonga
October 10, 1970 - Fiji
March 26, 1971 - Bangladesh
August 15, 1971 - Bahrain
Sept. 3, 1971 - Qatar



November 2, 1971 - United Arab Emirates
July 10, 1973 - Bahamas
Sept. 24, 1973 - Guinea-Bissau
February 7, 1974 - Grenada
June 25, 1975 - Mozambique
July 5, 1975 - Cape Verde
July 6, 1975 - Comoros
July 12, 1975 - Sao Tome and Principe
Sept. 16, 1975 - Papua New Guinea
November 11, 1975 - Angola
November 25, 1975 - Suriname
June 29, 1976 - Seychelles
June 27, 1977 - Djibouti
July 7, 1978 - Solomon Islands
October 1, 1978 - Tuvalu
November 3, 1978 - Dominica
February 22, 1979 - Saint Lucia
July 12, 1979 - Kiribati
October 27, 1979 - Saint Vincent and the Grenadines
April 18, 1980 - Zimbabwe



July 30, 1980 - Vanuatu
January 11, 1981 - Antigua and Barbuda
Sept. 21, 1981 - Belize
Sept. 19, 1983 - Saint Kitts and Nevis
January 1, 1984 - Brunei
October 21, 1986 - Marshall Islands
November 3, 1986 - Micronesia, Federated States of
March 11, 1990 - Lithuania
March 21, 1990 - Namibia
May 22, 1990 - Yemen
April 9, 1991 - Georgia
June 25, 1991 - Croatia
June 25, 1991 - Slovenia
August 20, 1991 - Estonia
August 21, 1991 - Kyrgyzstan
August 24, 1991 - Russia
August 25, 1991 - Belarus
August 27, 1991 - Moldova
August 30, 1991 - Azerbaijan



Sept. 1, 1991 - Uzbekistan
Sept. 6, 1991 - Latvia
Sept. 8, 1991 - Macedonia
Sept. 9, 1991 - Tajikistan
Sept. 21, 1991 - Armenia
October 27, 1991 - Turkmenistan
November 24, 1991 - Ukraine
December 16, 1991 - Kazakhstan
March 3, 1992 - Bosnia and Herzegovina
January 1, 1993 - Czech Republic
January 1, 1993 - Slovakia
May 24, 1993 - Eritrea
October 1, 1994 - Palau
May 20, 2002 - East Timor
June 3, 2006 - Montenegro
June 5, 2006 - Serbia
February 17, 2008 - Kosovo


அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.



Sunday, August 14, 2011

தொடங்கியது வன யுத்தம்... 'வீரப்பன்' மனைவியாக விஜயலட்சுமி!

தொடங்கியது வன யுத்தம்... 'வீரப்பன்' மனைவியாக விஜயலட்சுமி!




ஒருவழியாக சந்தனக் காட்டு வீரப்பன் வாழ்க்கையை படமாக்கும் வேலையை தொடங்கிவிட்டார் குப்பி புகழ் ஏஎம்ஆர் ரமேஷ்.

காட்டையும் நாட்டையும் கலக்கி வந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு படமாக்கும் முயற்சியில் நான்கைந்து இயக்குநர்கள் இறங்கியிருந்தனர். பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா கூட, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி துணையுடன் இந்தப் படத்தை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்.

இப்போது, ஏஎம்ஆர் ரமேஷ் அதற்கான படப்பிடிப்பையே ஆரம்பித்துவிட்டார்.

படத்துக்கு வன யுத்தம் என பெயர் வைத்துள்ளனர். வீரப்பன் வேடத்தில் நடிப்பவர் கிஷோர். பொல்லாதவன் உள்ளிட்ட எக்கச்சக்க படங்களில் ஹீரோக்களை முந்திக் கொண்டு நல்ல பெயரை தட்டிச் சென்றவர்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராகும் இந்தப் படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடிப்பவர் விஜயலட்சுமி. சீமானை மிரட்டிப் பார்க்கும் விஜயலட்சுமி அல்ல.... இவர் சென்னை 28 புகழ் விஜயலட்சுமி!

அதிரடிப் படை தலைவர் விஜயகுமார் வேடத்தில் அர்ஜூனும், எஸ்பி செந்தாமரைக் கண்ணன் வேடத்தில் ரவி காலேவும் நடிக்கிறார்கள். கன்னட நடிகர் ராஜ்குமார், அவர் மனைவி பர்வதம்மா பாத்திரங்களில் முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்தப் படம் குறித்து ஏஎம்ஆர் ரமேஷ் கூறுகையில் , "வீரப்பன் குறித்து ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்து இந்தப் படத்தை உள்ளது உள்ளபடி எடுக்கப் போகிறேன். வீரப்பனின் கோபி நத்தம், ஒகேனக்கல் பகுதிகளில்தான் முழுப் படமும் எடுக்கப்படும்," என்றார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தமிழில் இதற்கு முன் வந்த படம் கேப்டன் பிரபாகரன். இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வீரப்பன் கதை. இதற்கு இளையராஜா மகன் யுவன் இசை!

வன யுத்தம்... வெளியாகவிருக்கும் வீரப்ப ரகசியங்கள்:



வன யுத்தம் என்ற பெயரில் சந்தன கடத்தல் வீரப்பன் கதையை, இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ், படமாக எடுக்கிறார்.

இந்தப் படத்தில் வீரப்பனைப் பற்றிய பல வெளியில் தெரியாத உண்மைகள் ஆதாரங்களுடன் வைக்கப்படும் என்று தெரிகிறது.

குறிப்பாக கன்னட ராஜ்குமார் கடத்தல், அதில் கைமாறிய தொகை, யார் யார் எவ்வளவு கொள்ளையடித்தனர் போன்றவை குறித்த விவரங்களை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர்.

இந்தப் படம் கன்னடத்தில் அட்டகாசா என தயாராகிறது. வீரப்பனாக கிஷோரும், காவல்துறை அதிகாரியாக அர்ஜுனும், ராஜ்குமார் வேடத்தில் நடிகர் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராயும் நடிக்கிறார்கள்.

நன்றி : kathir.M

Friday, August 12, 2011

புதுவடிவ கணினி : Creative CPU

புதுவடிவ கணினி : Creative CPU



ஜப்பானில் உள்ளோருக்கு எப்போதுமே வித்தியாசமாக யோசிப்பார்கள்.இதோ இப்போது கணினியில் நாம் பயன் படுத்தும் CPU புது முறையில் உருவாக்கி இருக்கிறார்கள்.பார்க்கவே மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் உள்ளது.




















நாம் சென்ற பதிவில் முதல் கணினி யை பற்றி பார்த்தோம்.இப்பொது இதை பார்க்கும் போது அறிவியல் எவ்வளவு வளர்ந்து விட்டது என்று தோன்றுகிறது...உங்கள் கருத்துக்களை பகிரவும் நன்றி.. :)


Wednesday, August 10, 2011

முதல் கம்ப்யூட்டர் : First Computer

முதல் கம்ப்யூட்டர் : First Computer




இந்த படத்துல உள்ளது என்னவென்று தெரியுதா? அவர் வண்டியில் கொண்டு செல்வது தான் உலகின் முதல் Hard Drive , 1956 உருவாக்கியது. இதோட சேமிக்கும் அளவு என்ன தெரியுமா? வெறும் 5 எம்.பி.தான் (5 MB). இதை IBM செப்டம்பர் 1956 உருவாக்கியது. இது தான் Hard Drive முதல் உள்ள கணினி.இதன் எடை சுமார் ஒரு டன் (1000 kg).ஆனால் 5 எம்.பி.தான் (5 MB)வெறும் சேமிக்க முடியும்.. Technology எவ்ளோ வளர்துடுச்சு. இன்னிக்கு நம்ப நகம் அளவு உள்ள ஒரு சின்ன சிப் ல பல GB அளவு தகவல்களை நாம சேமிக்கலாம்.

Its a hard disk in 1956....The Volume and Size of 5MB memory storage in 1956.In September 1956 IBM launched the 305 RAMAC, the first computer with a hard disk drive (HDD). The HDD weighed over a ton and stored 5MB of data.

உங்கள் கருத்துக்களை பகிரவும் நன்றி.. :)

Tuesday, August 9, 2011

தண்டவாளத்தில் ஒரு வைத்தியம் : Railway Theropy

தண்டவாளத்தில் ஒரு வைத்தியம் .




இந்தோனேசியா வில் வாழும் மக்கள் ஒரு புது முறையான வைத்தியத்தை கண்டு பிடித்து உள்ளனர்.அந்த ஊரில் வாழும் மக்கள் அங்குள்ள தண்டவாளங்களில் வந்து படுக்கின்றனர்.இது அவர்கள் உடம்பில் உள்ள சில நோய்களை குணமாக்குவதாக சொல்கின்றனர்.



ஒரு வருடத்திற்கு மேலாக இவர்கள் இதை செய்கின்றனர்.இதற்கு நல்லா பயன் இருப்பதாகவும் கூறுகின்றனர்.



இங்குள்ள மக்கள் எலெக்ட்ரிக் ரயில் தண்டவாளங்களில் மின்சக்தி உள்ளதால் அது தங்கள் வியாதிகளை குனமகுவதாக சொல்கின்றனர்.



ஆனால் இவர்கள் இப்படி செய்வது ரயில் லில் வரும் பயணிகளையும் ரயில் ஓட்டுநர்களையும் மிகவும் பயமுறுத்துகிறது.அதனால் இந்த ஸ்டேஷன் அதிகாரிகள் "பயப்பட வேண்டாம் " அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர்.போலீஸ் இவர்களை அகற்ற எவ்ளவோ முயன்றும் முடியாததால் இப்படி செய்ததாக சொல்கிறார்கள்.



In Indonesia, invented a new way of healing from various diseases.
Residents come daily to the railway station and located on the rails.
I never thought that such therapy may be beneficial for the body.



For more than a year, residents of a small town in Indonesia come to lie on the railroad tracks at the station Rava Boillat.



People are convinced that the electric current running along the railroad tracks, and can help in curing a number of diseases.



By conviction of Indonesians, this therapy cures diabetes, gout, rheumatism, hypertension, high blood cholesterol and obesity.



Indonesians practice a relsoterapiyu about a year. And all come exclusively to one station - in the town of Rawa Boillat.



According to local legend, here in the past year saw the first case of miraculous healing. Live in China partially paralyzed and lay on the rails, to commit suicide. But the electric shock on the contrary put him on his feet.Evidence of this, however, does not.



The massive desire to be healthy and brings a lot of trouble to employees of the railway. On the day of the rails lie dozens of people. Threatening posters are not afraid of them.



But the kind of people lying scares drivers and passengers.



Police officers persuaded the stubborn cases, even for the sake of the healing effect should not risk your health.But so far all in vain.



As the Indonesian doctors, electroconvulsive therapy is used in traditional medicine only for treatment of mental disorders, and certain brain diseases.





நம்ப ஊர்ல யாரும் இப்படி போய் தண்டவாளத்துல படுதுடாதீங்க ... :)
உங்கள் கருத்துக்களை பகிரவும் .. நன்றி.. :)