Tuesday, May 31, 2011

Obama childhood photos: ஒபாமா வின் சிறுவயது படங்கள்

Obama childhood photos: ஒபாமா வின் சிறுவயது படங்கள்





















உங்கள் கருத்துகளை பகிரவும்.

Thursday, May 26, 2011

15 Most Beautiful Gardens in the World : உலகின் அழகிய தோட்டங்கள்

15 Most Beautiful Gardens in the World :
உலகின் அழகிய தோட்டங்கள்

இதோ கோடை வெய்யிலுக்கு குளுமையாக உலகின் அழகிய தோட்டங்கள்.

Gardens of Versailles, France



Butchart Gardens, Canada



Kirstenbosch National Botanical Garden, South Africa



Boboli Gardens, Italy



Huntington Botanical Gardens, USA



Nong Nooch Tropical Botanical Garden, Thailand



Yu Yuan Garden, China



Garden of Cosmic Speculation, Scotland



Keukenhof Gardens, Netherlands



Exbury Gardens, UK



Ryoan-ji Zen Garden, Japan



Mirabell Gardens, Austria



Vertical Garden (Musee du quai Branly), France



Lost Gardens of Heligan, United Kingdom



Rikugien Garden, Japan



உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...

Wednesday, May 25, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 7

ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு.




ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே .சேகர் இடைவிடாமல் பணி புரிந்த காலத்தில் உணவைப் பற்றியோ ,ஓய்வைப் பற்றியோ கவலைப்பட்டதே இல்லை.டீயும் ஒரு சில பிஸ்கட்டுகளையும் மட்டுமே சாப்பிட்டு வீட்டு ரெகார்டிங் அறையே கதி எனக் கிடந்தார்.சில சமயம் ,நள்ளிரவு வேலையில் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்படும்.வலி போருக்க முடியாமல் தலையனையை வயிற்றிற்கு கொடுத்து குறுகிப் படுத்துக் கிடப்பார்.உயிரைக் கொள்ளும் அந்த வலி கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியதும் மெல்ல கண் அயர்வார்.இமை மூடி ஓரிரு மணி நேரமே ஆகி இருக்கும் ...அதற்குள் விடிய ஆரம்பித்து விடும்.காலை எழு மணிக்கே இசை பணியாளர்கள் காதிருப்பார்களே என்கிற அலாரம் அடித்ததும்,தூக்கம் கலைத்து எழுந்து ஒளிபதிவுக் கூடத்துக்கு ஓடுவர்.வயிற்று வலியைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்கக் கூட நேரம் இல்லை.அந்த வலியைப் பற்றி அவர் யாரிடமும் சொல்வதுவும் இல்லை.


இதில் மற்றொரு சோகம் என்னவென்றால் ... மகத்தான இசை அமைப்பாளரான அவர், தனக்கான பட வாய்ப்புகள் இன்றி ,பிற இசை அமைப்பாளர்களுக்கே வேலை செய்தது தான். பழசிராஜா படத்தில் , அருமையான 10 பாடல்களைக் கொடுத்தார் சேகர்.அதில் ஏ.எம்.ராஜாவும் ,எஸ்.ஜானகியும் பாடிய "சிரகற்று வீனொரு கொச்சுத் தும்பி ...", பி.சுசீலா படிய பிரபல தாலாட்டுப் பாடலான "முத்தே வாவாவூ " போன்ற பாடல்கள் இண்டைக்கும் கேட்பதற்கு சுகமாக இருக்கும்."சாயிபே .. சாயிபே ..அஸ்ஸலாமு அலைக்கும்" என்கிற பட்டு அங்கே ஒரு trendsetter .அதற்கு அடுத்து அவர் இசைஅமைப்பில் பல வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த "ஆயிஷா " படத்தில் பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடிய 'யாத்ராகரா போவுக போவுக ... ' பாட்டு பி.பி.ஸ்ரீனிவாசின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று.ஆனாலும் ஒரு மனிதனால் எவ்வளவு நாட்கள் தான் இசை அமைக்கும் வைப்பு கிடைக்காமல் பொருளாதார ரீதியாக சமாளிக்க முடியும்? நாட்கள் செல்ல செல்ல ,ஆர்.கே.சேகரின் நோய் தான் கொடூர கரங்களால் அவரிச் சுற்றி வளைத்தது.நடமாட முடியாதபடி படுக்கையில் விழுந்தார்.சிறுவனாக இருத்த திலீப் அப்போது மருத்துவமனைக்குத் தினமும் சென்று அப்பாவை பார்த்த நினைவுகள் ,அவரது மனதில் நீங்காத சித்திரங்களாக பதிந்திருகின்றன.



அப்பா மருத்துவ மனையில் படுத்திருக்கிறார்.சுற்றிலும் நிற்கும் அவருடைய உதவியாளர்கள்,அவர் சொல்லும் இசை நோட்டுகளைக் குறிபெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.சில சினிமா இயக்குனர்கள் வந்து ,"இந்த நிலைமையில் இப்படிச் சொல்லக் கஷ்டமா இருக்கு.ஆனா ,நீங்க எழுந்து வந்தால் தான் எங்க பட மியூசிக் எல்லாம் கம்பலீட் ஆகும் ." என்று சங்கடத்துடன் சொல்கிறார்கள்.நோயின் தீவிரத்துக்கு நடுவிலும் டுன் கலைக் கேட்டு அதற்கான அரங்கேமென்ட் நோட்டுகளை எழுதிக் கொடுக்கிறார் சேகர்.பிரபல திரைப்படப் பாடலாசிரியர் ஸ்ரீகுமாரன் தம்பி வந்து சேகரின் கைகளைப் பற்றிக்கொண்டு சீக்கிரமே குணமாகீடுவீங்க , நாம சேர்ந்து சீக்கிரமே மறுபடியும் மியூசிக் செய்யலாம்" என்கிறார்.இருவரும் இணைந்து பல படங்களில் சிறந்த பாடல்களைக் கொடுத்தவர்கள்.ஒரு வறண்ட புன்னகையை அவருக்கு பரிசாக அளிக்கிறார் சேகர்.தான் நோயைப் பற்றிய தீவிரம் அவருக்கு அப்போது தெரிந்தே இருந்தது. சிறுவன் திலீப் இந்தக் காட்சிகளை எல்லாம் ஒரு வித பிரம்மிப்புடன் குழப்பமாக பார்க்கிறான்.



ஒரு தேனீயைப் போல சுறுசுறுப்பாக சுழன்று வேலை பார்த்த அப்பாவுக்குத் தீடிரென்று என்ன ஆனது என்று புரியவில்லை.அப்பா ஒரு சிறந்த இசை அமைப்பாளர் என்பது மட்டும் தான் தெரியும்.வீட்டில் அப்பா சேகரித்து வைத்திருந்த இசைதத் தட்டுகள்,இசைக் கருவிகளும் தான் திலீப்பின் விருப்பமான உலகம்.விரைவில் அப்பாவுக்கு உடம்பு சரியாகிவிடும் , முன்பு போல அவர் உற்சாகமாக இசைப் பணிகளுக்குத் திரும்புவார் என்று திலீப் நம்பினான்.ஆனால் ,அந்த நம்பிக்கை நனவாகவில்லை .அப்பாவின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகியது.

தொடரும் ...

Monday, May 23, 2011

உலகின் அதிக நாட்கள் வாழும் மனிதர் : World oldest man

உலகின் அதிக நாட்கள் வாழும் மனிதர் : World oldest man


kubinsomu - குபின்சொமு என்ற இந்த மனிதர் உலகிலேயே வயதானவர். 111 வயதாகும் இவர் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினர். இவருக்கு 11 பிள்ளைகள், 40 பேரன்கள், 15 கொள்ளுப் பேரன்கள் உள்ளனர்.











Wednesday, May 18, 2011

யார் இந்த டன்கன் பிளெட்சர்? : who is this Duncan Fletcher

யார் இந்த டன்கன் பிளெட்சர்? : who is this Duncan Fletcher



கேரி கர்ஸ்டன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சாதித்து விலகிய பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இங்கிலாந்து அணிக்கு 8 ஆண்டுகள் பயிற்சியாளராகப் பணியாற்றிய டன்கன் பிளெட்சர் என்ற முன்னாள் ஜிம்பாப்வே வீரரை பயிற்சியாளராக அறிவித்தது.

ஒப்பந்த காலம் முடிந்து விலகிய கேரி கர்ஸ்டன்தான் டன்கன் பிளெட்சரை பரிந்துரை செய்துள்ளார். கர்ஸ்டனின் பரிந்துரையின் பேரிலேயே பிளெட்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.

katanth kaalaththil pilechtar:



1999ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பிளெட்சர் பொறுப்பேற்றபோது இங்கிலாந்து அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் என்று அனைத்திலும் தோல்வி மயம்.

அப்போதுதான் நாசர் ஹுசைன், மைக்கேல் வான் ஆகியோரது தலைமையில் புதிய தன்னம்பிக்கையை இங்கிலாந்து அணி பிளெட்சரின் பயிற்சியில் பெறுகிறது. இவரது பயிற்சிக் காலத்தில்தான் இங்கிலாந்து அணி பாகிஸ்தான், இலங்கையில் டெஸ்ட் தொடர்களை வென்றது. துணைக்கண்டத்தில் இங்கிலாந்து நிகழ்த்திய அதிகபட்ச இந்த சாதனை பிளெட்சர் காலத்தில்தான் நடந்தது. அதன் பிறகு இங்கிலாந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு 2005ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை வெல்வதில் பிளெச்டரின் பங்கு பற்றி நாசர் ஹுசைனும், கேப்டன் மைக்கேல் வானும் மிகச் சிறப்பாகவே புகழ்ந்து பேசியுள்ளனர்.

இதனாலெல்லாம் இந்திய கிரிக்கெட் அணிக்கு இவர் சிறந்த பயிற்சியாளராக மிளிர்வார் என்று முன் கூட்டியே நாம் அறுதியிடவில்லை. கேரி கர்ஸ்டனும் முன் அனுபவம் இல்லாமல்தான் வந்தார். முன்னதாக ஜான் ரைட்டும் அனுபவம் இல்லாமல்தான் வந்தார். ஏன் கிரெக் சாப்பலுக்கே ஒரு சர்வதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அனுபவம் அதுவரை இருந்ததில்லை என்பதே நாம் கவனிக்கத்தக்கது.

கேரி கர்ஸ்டன் போன்றே, டன்கன் பிளெட்சரும், "நான் உங்களுக்கு எப்படி உதவட்டும்? என்ற அணுகுமுறையை உடையவர் என்று கூறப்படுகிறது.. மாறாக கிரெக் சாப்பலின் 'நீ இப்படித்தான் செய்தாகவேண்டும்' என்ற அணுகுமுறையே இந்திய அணியை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது.

எனவே நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Friday, May 13, 2011

Vehicle Series - 4 : Pocket Scooters

பாக்கெட் ஸ்கூட்டர் : Pocket Scooters



இந்த புது விதமான ஸ்கூட்டரை நாம் எங்கு வேண்டுமாலும் எடுத்து செல்லலாம்.போக்குவரத்துக்கு மிகவும் ஏற்றது.எடுத்து செல்லவதும் சுலபம்.



















Saturday, May 7, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 6

ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு.



History repeats itself:

அந்த காலங்களில் சேகர் கொடுக்கும் இசை 'நோட்'டுகளை காம்ப்ஹோ ஆர்கனிலும் , கிடரிலும் வாசிப்பவராகப் பணியாற்றி இருக்கிறார் இளையராஜா.பின்னலில் சேகரின் மகன் ரஹ்மான், இளையராஜாவின் கீ போர்டுJustify Full வாசிபவராகப் பணியாற்றியது ஒரு ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்துகிறது. "History Repeats itself".

தமிழக ஆரசுப் பணியில் மின்சாரத் துறையில் பணியாளராகத் தான் வாழ்வைத் துவக்கிய சேகர், ஒரு கட்டத்தில் இசைத் துறைக்கு மாறினார்.ஹார்மோனியக் கருவியில் இயல்பாகவே மிகுந்த திறமையுடன் இருத்த அவர், தட்சிணாமூர்த்தி இடம் கர்நாடக இசை கற்றுத் தேர்ந்தார்.கொஞ்சம் கொஞ்சமாக இசையின் பல்வேறு பரிணாமங்களையும் புரிந்து கொண்ட இசை கோப்பலரகவும், இசை நடத்துனராகவும் மாறினார்.

மலையாளப் பட இசை உலகில் திறமையான இசை அமைப்பாளர்கள் இருந்தனர்.அவர்களில் டியூன் போடுவதில் திறமை பெற்றிருந்த பலர், அதை ஒரு அமைப்பு ரீதியான இசைப்படிவமாக மாற்றக்கூடிய , சரியான இசை நோட் களை எழுதி வாதியக்கரர்களுக்கு கொடுக்க கூடிய திறன் இல்லாமல் இருந்தார்கள்.அவர்களுக்கு எல்லாம் ஒரு வரப்ரசாதமாக இருதார் சேகர்.



" 'பழசிராஜா' படத்தின் மூலம் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து மலையாளப்பட இசை உலகில் புயல் என புகுந்த ஆர். கே .சேகர், தான் அடுத்த பட வாய்ப்புக்காக எட்டு வருடம் காத்திருந்ததையும் , நடுவே பொருளாதார தேவைக்காக இப்படிப்பட்ட இசை நடத்துனர் வாய்ப்புகளை தட்ட முடியாமலும் இருந்ததைப் பற்றிய நிலையை என்ன வென்று சொல்வது.?" என்று பெருமூச்சு விடுகிறார் ஷாஜி.

ஓய்வு ஒழிச்சல் இல்லாத சேகரின் இசைப் பணி ராப்பகலாக நடந்தது. வீட்டை விடு வெளியே செல்லும் சேகர்,வேலை முடிந்து எப்போது வீடு திரும்புவர் என்று அவர் குடும்பத்திற்கே தெரியாது.அந்தப் ஓயாப்பனியும் அலைச்சலும் கடும் உழைப்பும் தான் ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகரை ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையில் தள்ளியது.


தொடரும்....
உங்கள் கருத்துகளை பகிக்ரவும் நன்றி.. :)

Thursday, May 5, 2011

குழாயிலே ஒரு குடும்பம் : A family in Pipe

குழாயிலே ஒரு குடும்பம் : A family in Pipe














Monday, May 2, 2011

உலக அழிவு - 5 : மதங்கள் என்ன சொல்கின்றன..??

உலக அழிவு - 5 : முஸ்லிம் மதத்தின் கருத்துக்கள்.



நாம் இந்த பதிவுகளில் உலக அழிவுக்கான காரணங்களை பற்றி பார்த்து வருகிறோம். உலக அழிவை பற்றி மதங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.யாரையும் பயமுறுத்த அல்ல...

குர்ஆன் என்ன சொல்கிறது...?

உலக அழிவு என்பது முஸ்லிம் மதத்தை பொறுத்தவரை மறுமை நாள் ஆகும்.



மறுநாளின் நம்பிக்கை என்பது குர்ஆனில் முக்கியமான விடயங்களில் ஒன்றாகும் முஹம்மது நபிகளார் (ஸல்) சொல்கின்ற உலக முடிவு நாள் பற்றிய குறிப்புகளில்

  • பெற்ற தாயை கவனிக்க கடமைப்பட்ட ஆண் பிள்ளைகள் தாயை கவனிக்காமல்விட்டுவிடுவார்கள். அதனால் தாய் தனது மகளை சார்ந்து மகளின் தயவில்வாழும் நிலை ஏற்பட்டால்…(ஏற்பட்டிருக்கின்றது.)
  • வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளைமேய்த்துக்கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாகஆவது…(ஆகியிருக்கின்றார்கள்).
  • குடிசைகள் திடீர் திடீரென்று கோபுரமாக மாறினால்…(மாறியிருக்கின்றது)
  • உலகில் விபச்சாரமும் மதுவும் பெருகினால்
  • தகுதியற்றவர்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவதும் அவர்கள்நாணயமின்றி நடந்து கொள்வதும் …(நடக்கின்றது)
  • பாலைவனங்கள் சோலையானால்…(ஆம்)
  • காலம் சுருங்கிவிடும் (முஹமது நபிகளார் தான் வாழ்ந்த காலத்தை உதாரணமாகசொல்லும் போது அதாவது இன்றைக்கு 1432 வருடத்திற்கு முன்பு “(இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகிவிடும். இன்றைய ஒருநாள் அன்றுஒருமணிநேரம் போல ஆகிவிடும். ஒரு மணி என்பது ஒரு வினாடி போன்றுஆகும்..(நடக்கிறது)
  • கொலைகள் அதிகரிப்பதுவும்…(ஆம்)
  • நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தால்
  • மனிதர்கள் பள்ளிவாசல்களை காட்டி என்னுடையது பெரிதா உன்னுடையதுபெரிதா என்று சொல்லி பெருமையடிப்பது….(உண்மைதான்)
  • கடைகள் பெருகுவது….(பெருகி விட்டது)
  • பெண்களின் எண்ணிக்கை உலகத்தில் அதிகரித்தல்..
  • ஆடை அணிந்தும் நிர்வாணமாக தோற்றமளிக்கும் பெண்கள் உலகத்தில்தோன்றுவது…(உண்மைதானே)
  • பேச்சை தொழிலாக்கி பொருள் திரட்டுவது(அரசியல்வாதிகள் போன்றோர்) (திரட்டுகின்றார்கள்)
  • தற்கொலை அதிகரித்தல்..(அதிகரித்திருக்கின்றது)
  • தான் தான் இறைதூதர் என்றும் நபி என்றும் பொய் சொல்பவர்கள்அதிகரித்தல்….(மிக அதிகரித்து விட்டார்கள்)

முஹம்மது நபியவர்கள் உலகத்தின் முக்கியமான தீர்க்கதரசி. அவர் இந்த உலகத்தில் வாழ்ந்தவர். அவர் மரணித்து 1400 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் அவரது தீர்க்க தரிசனங்கள் சத்தியமானவையாக இருக்கின்றன.

மேற்சொன்னவைகள் நடந்தால் உலக முடிவுநாள் வரும் என்று நபிகளார் சொன்னார்கள். ஆனால் உலக முடிவுநாள் என்பது திடீரென்று வந்துவிழும் ஒன்றல்ல. யாராலும் அறியமுடியாதவாறு அது மறைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் உலகத்தில் மரணமும் அழிவும் ஏதோ ஒருவகையில் எம்மை துரத்திக்கொண்டிருக்கின்றன.

அவர்கள் சொன்ன அனைத்தும் இப்போது நடந்து கொண்டு இருகின்றன... எப்போது என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.உங்கள் கருத்துகளையும் கம்மேன்ட்சும் எதிர்பார்கிறேன்.உங்கள் சந்தேகம்களை என்னிடம் கேட்கலாம்.தங்கள் வருகைக்கு நன்றி... :)

Sunday, May 1, 2011

விசித்திர புறாக்கள் : Groomed Pigeons

விசித்திர புறாக்கள் : Groomed Pigeons



இங்கு நாம் காணும் புறாக்கள் அனைத்தும் அமெரிக்கா வில் நடந்த தேசிய புறாக்கள் பங்கேர்ப்பில் கலந்து கொண்டு வித்தியாசமான தோற்றத்திற்காக பரிசு வாங்கியவை. இதில் மொத்தம் 1371 பறவைகள் பல நாடுகளில் இருந்து வந்து கலந்துகொண்டன.