Friday, April 8, 2011

இந்தியா உலகக்கோப்பை:மேட்ச் பிக்ஸ் செய்யப்பட்டதா ?

இந்தியா உலகக்கோப்பை:மேட்ச் பிக்ஸ் செய்யப்பட்டதா ? is India's worldcup a FIXED MATCH..?

28 ஆண்டுகளுக்கு பின் இந்தியா உலக கோப்பையை வென்றுள்ளது.டோனி தலைமையில் இந்தியா பல சாதனைகளை செய்துள்ளது.இதோ இன்று ஐ . பி . எல் தொடங்குகிறது. இந்தியா உலகக்கோப்பை வென்றது எனக்கும் மகிழ்ச்சி .ஆனால் எனக்கு இந்தியா வென்றது முதல் இது ஒரு மேட்ச் பிக்சிங் இருக்குமோ என்ன சந்தேகம்.இந்தியா விளையாடியதை பார்க்கும் போது அது முளுதிர்மையுடன் விளையாடியதை தெரியவில்லை.ஏன் என்ன்றால் இந்தியா ஒரு 100% அணி கிடையாது என்பது என் கருத்து.


இந்தியா அணி கேப்டன் டோனி யும் கேப்டன் என்று சொல்ல முடியாது.லக்கி கேப்டன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.அது அவர் பேச்சில் இருந்தே தெரிகிறது. அரை இறுதியில் அஸ்வின் பதிலாக நெஹ்ரா வை எடுத்து பின் அதற்கு விளக்கம் வேறு கொடுத்தார்.தான் தவறான முடிவு எடுத்ததாகவும் ஆனால் நெஹ்ரா நன்றாக தான் பந்து வீசினர் என்று சொன்னார். இதே தவறை தான் இறுதி போட்டியிலும் செயதார்.ஸ்ரீசாந்த் ,பங்களாதேஷ் சுடன் ஆடும் போதே அவர் லைக்கு இல்லாதவர் என்று முடிவானது.அப்படி இருத்தும் கோப்பையை முடிவு செய்யும் போட்டியில் அவரை எடுத்தார்.அஸ்வின் இரண்டு போட்டியில் நன்றாக வீசியும் அவரை தவிர்த்து ஸ்ரீசாந்த் தை எடுத்தது ஏன் என்று தெரியவில்லை.ஒரு வேளை ஸ்ரீசாந்த் அந்த போட்டியில் நன்றாக பந்து வீசி இருந்தாலும் பரவா இல்லை.இது எனக்கு சந்தேகம் வந்தது.


இந்தியா வென்றது மேட்ச் பிக்சிங் என்று நான் சொல்ல காரணங்கள்:


1) கேவலமான இலங்கை அணியின் பில்டிங். இவளவு மோசமாக நான் இலங்கை அணி பில்டிங் செய்து பார்த்தது கிடையாது.அதுவும் உலகக்கோப்பை போன்ற ஒரு முக்கியமான மேட்ச் சில் ... (என்னை திட்ட நினைபவர்கள் சென்ற உலகக்கோப்பை இறுதியில் ஆஸ்திரேலியா வுடன் இலங்கை அணியின் பில்டிங் கை பார்க்கவும்.)


2) முரளிதரன் இவ்வளவு மோசமாக பந்து வீசி நான் பார்த்தது இல்லை. அதுவும் அவருடைய கடைசி போட்டியில்.சச்சின் விளையாடி இருந்தால் பரவா இல்லை.கம்பீர் ,க்ஹோலி யை அவுட் செய்ய இவரால் முடியாதா?


3) கம்பீர் ரின் ரன் அவுட் மிஸ்ஸனது.கம்பீர் ரை சுலபமாக அவுட் ஆக்கும் வைப்பை சங்ககாரா அசால்ட் தக விடுவார்.அவருடைய அனுபவத்திற்கு இது பெரிய தவறு.அதுவும் உலகக்கோப்பை யில் இப்படி விடுவது என்னால் நண்பா முடியவில்லை.


4) டோனி கண்டிப்பாக ஒரு திறமையான கேப்டன் கிடையாது.அதிஷ்ட கேப்டன் மட்டுமே.அதுவும் இந்த போட்டியில் அது அதிஸ்டமா இல்ல பணமா என்று தெரியவில்லை.எனக்கு அவர் 2007 உலகக்கோப்பை வென்ற போது ரொம்பவும் பிடித்தது.ஆனால் இப்போது இல்லை.


5) டோனி இறுதி போட்டியில் விளையாண்டது என்னால் நம்ப முடிய வில்லை.அவர் அந்த அளவு பார்ம் மில் இல்லை.இப்போது எல்லாம் விக்கெட் விட கூடாது என்று ஆடும் அவர் அன்று மட்டும் யாரும் விக்கெட் எடுக்க மாட்டார்கள் என்பது போல் ஆடினார்.


6) ஆட்ட நாயகன் விருது டோனி கு கொடுத்தது.ஒரு வேளை இது ஒரு நியாயமான மேட்ச் என்றல் எல்லோருக்கும் தெரியும் வெற்றியை தந்தது கம்பீர் என்று... ஆனால் டோனி க்கு கொடுத்தது.எதோ பிளான் பணியது போல இருந்தது.


7) டோனி பேசும் போது "ஒரு வேளை தோற்று இருந்தால் என்னிடம் பல கேள்வி கேட்டிருப்பார்கள் .. ஏன் அஸ்வின் இல்லை ஸ்ரீசாந்த் என்று?ஏன் யுவராஜ் இல்லை நீ பேட் செய்ய வந்தாய் என்று.. அதற்காக தான் அடி வென்றோம் "என்று. அப்படி என்றால் யாரை போட்டு விளையாண்டலும் வெற்றி பெறுவோம் என்று அவருக்கு முன்னாடியே தெரியுமோ ?


இன்னொரு முக்கியமான காரணம் : ஐ.பி.எல்.


ஐ சி எல் லை தடை செய்த கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். கு அனுமதி அளித்தது ஏன்..? இந்தியா அப்போது தான் 20-20 உலகக்கோப்பை வென்றது.எனவே ஐ.பி.எல். நடத்தினால் அதை வைத்து மிகுந்த லாபம் பார்க்கலாம் என்று. அது தான் நடந்தது.முதல் ஐ.பி.எல். மாபெரும் வெற்றி.ஆனால் அடுத்த இரண்டும் மோசம் ஆனது.இரண்டாவது இந்தியாவில் நடத்த முடியாமல் தென் ஆப்பிரிக்காவில் நடத்தினர். மூன்றாவது இந்தியாவில் நடந்தாலும் சுவாரஸ்யமானதாக இல்லை. ஏன் ???



காரணம் இந்தியா வின் 20-20 உலகக்கோப்பை போட்டியில் படு தோல்வி."ஆமா இவங்க ஐ.பி.எல். ல காசு கொடுத்தா ஆடரங்க ஆனா நாட்டுக்காக ஆட மாட்டாங்க" என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்தார்கள். டோனி தலைமையில் சாம்பியன் கோப்பை வென்றும் நாம் உலகக்கோப்பையில் கேவலமா தோற்றோம். இந்த ஐ.பி.எல். மேலும் இரண்டு அணியை சேர்ந்துள்ளது. இந்த புதிய அணி இரண்டும் 1500 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி உள்ளனர்.


ஒரு வேளை இந்தியா உலகக்கோப்பையில் தோல்வி அடைந்து இருந்தால் கண்டிப்பாக இந்த ஐ.பி.எல். மாபெரும் தோல்வி அடைத்து இருக்கும். இதை யாராலும் மறுக்க முடியாது. அது மட்டும் இல்லாமல் ஐ.பி.எல். இருக்கும் போது மேட்ச் பிக்சிங் இன்னும் சுலபமாக இருக்கிறது.


நான் இங்கு சொன்னது என் கருத்தக்கள் மட்டுமே.இது யாரையும் புண்படுத்த அல்ல... நீங்கள் கிரிக்கெட் வெறியர் ராய் இல்லாமல் ஒரு சாதாரண ரசிகனை இருந்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை என்னோடு பகிரவும்.. உங்கள் கமெண்ட்ஸ் பொருத்து நான் அடுத்த பதிவில் இன்னும் நிறைய சொல்கிறேன்... நன்றி.

2 comments:

  1. ok. if like that did means why srilankans won the TOSS ?
    india should be won na ?
    . if it is not posiible means sankarkara should be askked to dhoni for batting na ?

    ReplyDelete
  2. @ismailmohemed:

    if they (srilanka )did so.. then there is a huge doubt on their act. sankakara did well till the world cup final. but why he avoid his captiaincy. there is nothing wrong other than FINAL. he feel guilty for the loss...

    (After all this is my view only. i dont tell this is real )

    ReplyDelete