Friday, March 18, 2011

கல்லறை தீவு - பாகம் 2 :திரை விமர்சனம்.

கல்லறை தீவு - பாகம் 2 :திரை விமர்சனம்.
Pirates of the Caribbean: Dead Man's Chest : movie review

இந்த படம் பார்க்கும் முன் கண்டிப்பாக முதல் பாகம் பார்க்கவும்.அப்போது தான் எல்லா கதாபாத்திரங்கள் தொடர்ச்சி கிடைக்கும்.இந்த படம் போன படத்தின் முடிவில் இறுதி ஆரம்பிகிறது.முதல் பாகத்தில் ஜாக் ஸ்பர்ரோவ் எலிசபெத் தையும் வில் லையும் சேர்த்து வைத்து விட்டு போர்ட் ராயல் லில் இறுதி தப்பி செல்வதோடு முதல் பாகம் முடிகிறது.

இந்த பாகத்தில் அறிமுகமாகும் 2 பேர் ஆளுனர் பக்கெட் மற்றும் டேவிட் ஜோன்ஸ் .

ஆளுனர் பக்கெட் : இவர் போர்ட் ராயல் லை ஆள வந்திருப்பவன் . புத்திசாலி , ஜாக் கின் திசை மானியை பற்றிய ரகசியம் அறிந்தவன் .

டேவிட் ஜோன்ஸ்: கடலில் மட்டுமே வாழும் சபிக்க பட்டவன்.இவனால் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிலத்திற்கு வர முடியும்.



போர்ட் ராயல் லுக்கு ஆளுநராக வரும் பக்கெட் ,எலிசபெத் மற்றும் வில் டர்னர் ரை கைது செய்கிறான். இதனால் அவர்கள் திருமணம் தடை படுகிறது.ஜாக் தப்பி செல்ல அவர்கள் உதவியதால் கைது செய்ததாக கூறுகிறான்.(முதல் பாகத்தில் )

இங்கு ஜாக் எதையோ தேடி சென்று ஒரு வரைபடத்துடன் வருகிறான்.அந்த வரை படத்தில் உள்ள சாவியை தேடி கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்கிறான்.ப்ளக் பியர்ல் லில் அவர்கள் பயணம் செய்கிறார்கள்.அப்போது ஜாக் வில் லின் தந்தையை தான் கப்பலில் பார்க்கிறான்.அவர் டேவிட் ஜோன்ஸ் சிடம் அடிமையை உள்ளார்.ஜாக் கிற்கும் ஜோன்ஸ் சிறகும் ஒரு உடன்படிக்கை இருப்பதால் ஜாக் கும் ஜோன்ஸ் சிடம் அடிமையாய் இருக்க வேண்டும் என்றும் தவறினால் ஜோன்ஸ் சின் கடல் மிருகம் அவனை கொன்று விடும் என்று சொல்லி செல்கிறார்.இதனால் பயம் அடையும் ஜாக் கடலிற்கு வராமல் மறந்து வாழ்கிறான்.அவளுக்கு டால்மா என்ற ஒரு பெண் உதவுகிறாள்.



இங்கு பக்கெட் வில் லிடம் பேரம் பேசுகிறான். ஜாக் கிடம் உள்ள திசை மணியை தன்னிடம் தந்தால் அவனையும் எலிசபெத்தையும் விட்டு விடுவதாய் சொல்கிறான்.இதனால் வில் ஜாக் கை தேடி புறப்படுகிறான். எலிசபெத் தின் தந்தை அவளை சிறையில் இருந்து தப்பிக்க வைக்கிறார்.எலிசபெத் வில் லை தேடி செல்கிறாள்.



ஜாக்கை சந்திக்கும் வில் அவனது திசை மணியை கேட்கிறான்.ஆனால் ஜாக் அவனிடம் டேவிட் ஜோன்ஸ் சிடம் உள்ள ஒரு சாவியை திருடி தருமாறு சொல்கிறான்.ஆனால் வில் லை ஜாக் வேறு திட்டம் போடு ஜோன்ஸ் சிடம் அனுப்புகிறான்.அங்கு வில் தனது தந்தையை சந்திக்கிறான்.அவர் தான் மகனுக்கு உதவுகிறார்.



டேவிட் ஜோன்ஸ் சின் இதயம் ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு ஒரு தீவில் புதைக்கப்பட்டு இருக்கிறது.அதை கண்டு பிடித்து அழித்தால் தான் அவனை கொள்ள முடியும்.அந்த பேட்டியின் சாவி எப்போதும் ஜோன்ஸ் சிடம் தான் இருக்கும்.ஜாக் அந்த இதயத்தை வைத்து ஜோன்ஸ் சிடம் பேரம் பேசி தனது அடிமை கணக்கை தீர்க்க நினைக்கிறான்.அந்த சாவியின் வரை படத்தை கொடுத்து வில் டர்னர் ரை அங்கு அனுப்பி அதை திருட சொல்கிறான்.அப்படி அவன் அதை கொண்டுவந்தால் வில் லிற்கு அவன் கேட்ட திசை மானியை தருவதாக சொல்கிறான்.



ஜாக் தனது அடிமை கணக்கை எப்படி தீர்த்தான்.?
டேவிட் ஜோன்ஸ் சின் இதயம் என்ன ஆனது.?
வில் தனது காதலி எலிசபெத் உடன் சேர்ந்தனா?
பக்கட் நினைத்தது அவனுக்கு கிடைத்ததா?
தளபதி நரிங்க்டன் என்ன ஆனார்.?
வில் தனது தந்தையை மீட்டானா ? ஜாக் என்ன ஆனான்?

என்பதை தெரிந்து கொள்ள படம் பார்க்கவும்.கண்டிப்பாக இந்த படமும் சிறந்த பொழுதுபோக்கு படம்.சில லாஜிக் மீறல்களை தரவிது பார்த்தால் சிறந்த படம். இந்த படத்தில் வரும் கடல்மிருகம் அருமையான கிராபிக்ஸ் கலக்கல்.மிக பிரம்மாண்டமாக அமைத்திருப்பார்கள்.இந்த பாகத்திலும் ஜாக் கின் காமெடி அட்டகாசங்கள் மற்றும் சேட்டைகள் அருமையாக இருக்கும்.இந்த படத்தின் முடிவு கொஞ்சம் சோகமாக இருந்தாலும் அருமையாக இருக்கும்.

இந்த படத்தின் முதல் பாகம் விமர்சனம் இங்கே.

இந்த படத்தின் ட்ரைலர் இங்கே.

3 comments:

  1. நல்ல விமர்சனம்..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @மதுரை சரவணன் :கண்டிப்பாக இந்த படம் பார்க்க வைப்பு கிடைத்தால் பாருங்கள்.உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  3. சூப்பர் அண்ணா...❤️❤️❤️❤️

    ReplyDelete