Saturday, February 19, 2011

உலகக்கோப்பை 2011:இந்தியா (World Cup team INDIA)

2011 உலகக் கோப்பையில் இந்தியா:




இந்த முறை தோனி தனது அணிச்சேர்க்கையை கவனமாகக் கையாள்வதில் உள்ளது வெற்றி தோல்விகள். சச்சின், சேவாக், கம்பீர், யுவ்ராஜ், தோனி, யூசுப் பத்தான், ரெய்னா,ஹர்பஜன், ஜாகீர், ஸ்ரீசாந்த் முனாஃப் படேல் என்று இருந்தால் பலமாக இருக்கும். யுவ்ராஜ் சிங் ஒரு போட்டியில் சொதப்பினாலும் உடனே தூக்கி விட்டு விராட் கோலியை அணியில் சேர்க்கவேண்டும். எந்த முடிவெடுத்தாலும் தைரியமாக விரைவாக தோனி
எடுக்கவேண்டும்.

ரெய்னா சரியாக விளையாடா‌விட்டாலும் இவர் இந்த முடிவை எடுக்கவேண்டும்.முதலிலிருந்து அனைத்துப் போட்டிகளையும் வெல்லும் தயாரிப்புடனும், மனோதிடத்துடனும் களமிறங்கவேண்டும், முதல் சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் காலிறுதியில் உடனடியாக தோற்று வெளியேறும் நிலை ஏற்படாது.
எதிரணியினருக்கு கிலி பிடித்துக் கொள்ளும்.



நெஹ்ராவை அணியில் எடுப்பதை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவேண்டும் ஏனெனில் நெருக்கமான அதிக ஸ்கோர் போட்டிகளில் இவர் நமக்கு தோல்வியைப் பெற்றுதந்து விடுவார் என்ற ரீதியில்தான் உள்ளது இவரது பந்து வீச்சு.தோனியைப் பொறுத்தவரை உள்ள மிகப்பெரியக் குற்றச்சாட்டு என்னவெனில் நடு ஓவர்களில் எதிரணி பேட்ஸ்மென்கள் செட்டில் ஆகும்போது அவர்களை வீழ்த்த எந்த வித முயற்சியும் மேற்கொள்ளாமல் மரத்தை வைத்தவன் தண்ணி ஊற்றுவான் என்பது போல் இருக்கிறார்.அந்தப் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். யுவ்ராஜ் சிங், உள்ளிட்ட பகுதி நேர பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்த முனையக்கூடாது. ஜாகீர், ஸ்ரீசாந்த், முனாஃப், ஹர்பஜன் என்று பந்து வீச்சு வரிசை இருந்தால், இன்னும் ஓரிரு பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தலாம் அதுவும் அனுபவமான சேவாக், போன்றவர்களுக்கு 5 ஓவர்களையோ, புது வீரரான விக்கெட் எடுக்கும் யூசுப் பத்தானுக்கோ கொடுக்கலாம்.

காரணமில்லாமல் யுவ்ராஜ், யூசுப், ரெய்னா, சேவாக், சச்சின் என்று அனைவரையும் பயன்படுத்தி ரன்களை வாரி வழங்கும் நிலைக்குச் செல்லக்கூடாது. எதிரணியினர், அது எந்த அணியாக இருந்தாலும் 300 ரன்களை எட்டிவிடாமல் கட்டுப்படுத்துவது அவசியமாகும் ஏனெனில் எல்லாப்போட்டிகளிலும் 300 ரன்களை நாம் வெற்றிகர்மாகத் துரத்துவது இயலாது.டாஸ் வென்றால் 300 ரன்களுக்கும் மேல் குவிப்பதுதான் பாதுகாப்பானது. இந்த பலமான பேட்டிங் வரிசையில் சேவாக், சச்சின் துவக்கம் அபாரமாக அமைந்தால் 350 ரன்களும் சாத்தியம்தான்.



யூசுப் பத்தானைக் கண்டு எதிரணியினருக்கு ஒரு புதிய நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தோனி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த பேட்டிங் வரிசையில் சேவாக், சச்சின், யுவ்ராஜ், ரெய்னா, தோனி, யூசுப் ஆகியோரது அதிரடியைக் கண்டு நிச்சயம் மற்ற அணிகள் அஞ்சித்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. எதிரணியினர்தான்
நெருக்கடியில் உள்ளனர். இதனை நன்றாக நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வங்கதேசம், அயர்லாந்து, ஹாலந்து என்று பலவீனமான அணியாக இருந்தாலும் முழு பலம் கொண்ட அணியையஏ களமிறக்கவேண்டும். அதில் தவறுகள் செய்ய வாய்ப்பேயில்லை.

உலகக் கோப்பை போட்டிகள், தோல்வியடைய முடியாது என்ற பயத்தில் பரிசோதனை முயற்சிகளைக் கைவிட்டு விடக்கூடாது. நெருக்கடி தருணங்களில் வழக்கத்திற்கு மாறான உத்திகளைக் கையாள்வதில் தோனி தயக்கம் காட்டக்கூடாது. பேட்டிங்கில் தோனி தனது பழைய அதிரடி முறையைக் கையாள்வது உசிதம், கிரெக் சாப்பலின் ஒரேயொரு உத்தி அருமையான ஒன்றாகும், துவக்கவ் வீரர்களுக்கு அடுத்த
டவுனில் யார் இறங்குவார்கள் என்பதை மற்றி கொண்டேயிருந்தால் நிச்சயம். எதிரணியினரின் திட்டங்களை அது பாழாக்கும்.

இந்த உலகக் கோப்பையில் யு.டி.ஆர்.எஸ். முறை உண்டு. எனவே
எல்.பி.டபிள்யூ.முடிவுகளும் 3-வது நடுவரிடம் முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால் இந்திய பேட்ஸ்மென்கள் எச்சரிக்கையுடன் விளையாடுவது நல்லது. பேட்டிங் பவர் பிளேயை எப்போது எடுப்பது என்பதிலும், எதிரணியினரின் பேட்டிங் பவர் பிளேயின் போது எந்த பந்து வீச்சாளர்களை வீச அழைக்கவேண்டும் என்பதிலும் தீவிரத் தயாரிப்புகளும் முன் கூட்டிய திட்டமிடுதலும் மிக முக்கியமானது.



இந்த பேட்டிங் பவர் பிளே என்ற புதிய முறை இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இதுவரை தோனி இந்த பவர் பிளே விஷயங்களில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.சச்சின் டெண்டுல்கர் நிச்சயம் இந்த உலகக் கோப்பையை வெல்வதில் அதிக முனைப்பு காட்டுவார் இந்த அழுத்தம் அவரது பேட்டிங்கில் தாக்கம் செலுத்தாமல் அவர்தான் காத்துக் கொள்ளவேண்டும்.

சேவாகின் அதிரடித் துவக்கம், ரெய்னா, தோனி, யூசுப்பின் இறுதி வேட்டு, ஜாகீர் கான், ஹர்பஜன் ஆகியோரது பந்து வீச்சு, தோனியின் தலைமை உத்திகள், மைதானத்தில் எடுக்கும் உடனடி புத்திசாலி முடிவுகள், சச்சின் டெண்டுல்கரின் பலம் இவையெல்லாம் இந்திய அணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புகளை இந்த உலகக் கோப்பையில் வழங்கியுள்ளது.

இருப்பினும் காலிறுதியிலிருந்து நாக்-அவுட் முறை என்பதால் காலிறுதியிலிருந்து ஒவ்வொரு போட்டியும் தங்களது போக்கையும், நிறத்தையும் எடுத்துக் கொள்ள்ம் என்பதால் எதையும் கணிப்பது கடினம்.

அரையிறுதி வரை இந்தியா வந்து விட்டால் கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாகவே நாம் கருதலாம்.கனவு நனவாகுமா? பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நாம் கனவு காணத்தொடங்குவோம். முடிவு எப்படியிருந்தாலும் ரசிகர்கள் அதனை கிரிக்கெட் ஆட்டத்தின்அடிப்படையில் புரிந்த கொண்டு வினையாற்றுவதே இந்திய கிரிக்கெட்டிற்குச்சிறந்தது.

No comments:

Post a Comment